கோஹ்லி அன்ட் கோ தோல்விக்கு நடிகை அனுஷ்காவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து நடிகை அனுஷ்கா சர்மாவை வைத்து மீம்ஸ் போட்டுள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து வருகின்றது. நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. கேப்டன் கோஹ்லி ஒரு ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இந்நிலையில் கோஹ்லியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள்.
அனுஷ்கா
இந்திய அணியின் தோல்விக்கு அனுஷ்கா என்ன பண்ணுவார் பாவம். அனுஷ்கா என்று கோஹ்லியை காதலிக்கத் துவங்கினாரோ அதில் இருந்து இந்திய அணி தோல்வி அடைந்தால் உடனே அவர் மீது பழியை போடுகிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். அனுஷ்காவை ஸ்டேடியத்தில் பார்த்தாலே போச்சு இன்று இந்திய அணி ஜெயிக்காது என்கிறார்கள் ரசிகர்கள்.
தோனி
கேப்டன் கோஹ்லியின் மனைவி என்பதை தவிர அனுஷ்காவுக்கும் இந்திய அணிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அப்படி இருக்கும்போது இந்த அளவுக்கு அவரை கலாய்க்கிறார்கள்.
மீம்ஸ்
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் புகைப்படத்தை நீக்கிவிட்டு அனுஷ்காவா?. யார் பார்த்த வேலைப்பா இது. யாருடைய ராசியாலும் இந்திய அணி தோல்வி அடையவில்லை என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கேஆர்கே
இந்திய அணிக்கு ராசியில்லாதவர் என்று தெரிந்தும் அனுஷ்கா சர்மா ஏன் நேற்றைய போட்டியை பார்க்கச் சென்றார். அவர் போட்டியை பார்த்ததால் தான் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது என்று பாலிவுட் விமர்சகர் கே.ஆர்.கே. தெரிவித்துள்ளார். #ICCWorldCup2019. தன் கணவர் தலைமையிலான அணி விளையாடுவதை பார்க்க ஆசைப்பட்ட அனுஷ்காவை இப்படி எல்லாம் ராசியில்லாதவர் என்று விமர்சிப்பதில் நியாயம் இல்லை. இந்திய அணிக்கு ராசியில்லாதவர் என்று தெரிந்தும் அனுஷ்கா சர்மா ஏன் நேற்றைய போட்டியை பார்க்கச் சென்றார். அவர் போட்டியை பார்த்ததால் தான் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது என்று பாலிவுட் விமர்சகர் கே.ஆர்.கே. தெரிவித்துள்ளார். #ICCWorldCup2019. தன் கணவர் தலைமையிலான அணி விளையாடுவதை பார்க்க ஆசைப்பட்ட அனுஷ்காவை இப்படி எல்லாம் ராசியில்லாதவர் என்று விமர்சிப்பதில் நியாயம் இல்லை.


Click it and Unblock the Notifications











