மூத்த நடிகர் வி.என்.சுந்தரம் மரணம்
ஆர்யமாலா, பட்டினத்தார் போன்ற படங்களின் கதாநாயகனும், மூத்த நடிகருமான வி.என்.சுந்தரம், சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.
1930ம் ஆண்டு வெளிவந்த சுந்தரமூர்த்தி நாயனார் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். வள்ளிகல்யாணம், தன அமராவதி, சந்திரஹாஸன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார்.
அம்பிகாபதி, மணமகள், தூக்குதூக்கி உள்பட சில படங்களில், சொந்த குரலில் பாடியிருக்கிறார்.
ஜெமினி கணேசன் போன்றவர்களுக்கும் கூட குரல் கொடுத்துள்ளார். பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்எல் வசந்தகுமாரியுடன் இணைந்து பல பாடல்கள் தந்துள்ளார் சுந்தரம்.
அவருடைய உடல் தகனம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சுடுகாட்டில் நடந்தது.
மரணம் அடைந்த வி.என்.சுந்தரம், பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டு என்கிற நட்ராஜின் கொள்ளு தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.
விஎன் சுந்தரத்தின் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











