twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமாவில் இப்போது நிறைய 'ஃபாரின் குழந்தைகள்'..- இயக்குநர் வீ சேகர் கமென்ட்

    By Shankar
    |

    தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வெளிநாட்டுப் படங்களின் காப்பியாக இருப்பதைக் குறிக்கும் வகையில், 'தமிழ் சினிமாவில் இப்போது நிறைய ஃபாரீன் குழந்தைகளைப் பார்க்கிறேன்," என சீனியர் இயக்குநர் வீ சேகர் கமெண்ட் அடித்தார்.

    சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள கங்காரு படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் வி.சேகர், "நிச்சயம் இது நல்ல படமாகத் தெரிகிறது. நம்பிக்கை அளிக்கிறது.

    Senior Director V Sekar's comment on new movies

    இப்போதைய படங்களைப் பார்க்கும் போது டெக்னிக்கலாக வளர்ந்திருப்பது தெரிகிறது. வெளிநாட்டிலிருந்து எவ்வளவோ டெக்னிக்கலாகப் பெறலாம். ஆனால் திரைக்கதை, கருத்து கலாச்சாரம் நமதாக இருக்க வேண்டும். பண்பாட்டை நம்மிடமிருந்துதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    குழந்தைக்கு சட்டை வெளிநாட்டில் எடுக்கலாம். ஆனால் குழந்தை நமதாக இருக்க வேண்டும். சட்டை பாரின்ல எடுக்கலாம்... குழந்தையே பாரின்ல வாங்க முடியுமா? சினிமாவும் அப்படித்தான். சினிமாவில் இப்போது நிறைய ஃபாரின் குழந்தைகளை அப்படிப் பார்க்கிறேன்.

    போக்குவரத்தில் சிறிய பெரிய வாகனங்கள் ஒரே நேரத்தில் போனால் வாகன நெரிசலில் டிராபிக் ஜாம்தான் ஏற்படும். அதைக் கட்டுப்படுத்த டிராபிக் சிக்னல், டிராபிக் போலீஸ் இருப்பதைப் போல ஒரே நேரத்தில் பல படங்கள் வருவதைக் கட்டுப் படுத்த தயாரிப்பளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

    English summary
    V Sekar urged the filmmakers must be adopted Tamil culture to their script.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X