twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உயிர்காக்க உதவுங்கள் - ஒரு மூத்த பத்திரிகையாளரின் சோகம்!

    By Shankar
    |

    Thiraineedhi Selvam
    இலங்கை கண்டியிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'செய்தி' பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்து கொண்டிருந்தவர் திரைநீதி செல்வம்.

    இனக்கலவரத்திற்கு பின் அங்கிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்தவர், இங்கு திரைப்பட செய்தி தொடர்பாளராகவும், மனோரமா போன்ற நட்சத்திரங்களுக்கு மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றி வந்தார்.

    ஓரளவு பிரச்சினையின்றி நகர்ந்து கொண்டிருந்த அவரது வாழ்வில் திடீர் புயல். அவரது மகள் தாரணியின் கணவர் எஸ்.சீனிவாசன் (வயது 48) திடீர் புற்றுநோயால் தாக்கப்பட்டுள்ளார்.

    அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு தன்னாலான முயற்சியால் சுமார் 2 லட்சம் வரை செலவழித்துள்ள அவர் இன்று மிக மிக வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

    சீனிவாசனுக்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு தொடர் கீமோ தெரபி சிகிச்சை அளித்தால்தான் அவர் உயிர் பிழைக்க முடியும் என்கிற சூழ்நிலை. ஒவ்வொருமுறை கீமோதெரபி செய்யும் போதும் ஐம்பதாயிரத்திற்கு குறையாமல் செலவாகும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    எனவே திரைநீதி செல்வத்தின் நெருக்கடியைத் தீர்க்க முன்வரும் நண்பர்கள், வாசகர்கள் கீழ்காணும் மருத்துவமனை முகவரிக்கே தங்களின் உதவியை காசோலை மூலமாகவோ, நேரடியாகவோ சென்று அளிக்கலாம்.

    Vasantha Subramanian Hospital pvt.ltd என்ற பெயரில் காசோலையோ, டி.டி.யோ அனுப்பலாம். பின்புறத்தில் மறவாமல் s.srinivasan. I.D.No 9041 என்று குறிப்பிடவும்.

    வங்கி முகவரி- அக்கவுன்ட் நம்பர் O.D.121168
    city union bank. Annasalai. Chennai

    English summary
    Thiraineedhi Selvam, one of the senior film journalists need some aid to cure his son in law his cancer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X