ஸ்டாலின் முதல்வரானால் ஆற்றில் மணல் அள்ளலாம்.. செந்தில் பாலாஜி சர்ச்சை பேச்சு.. டாப் 5 பீட்ஸில்!
சென்னை: ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற அடுத்த நிமிஷமே ஆற்றில் மணல் எடுத்துக்கொள்ளலாம் என செந்தில் பாலாஜி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் தேர்தல் கள நிலவரம் குறித்த தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட செந்தில் பாலாஜி, ஸ்டாலின் முதல்வரானால் அடுத்த நிமிஷமே ஆற்றில் மணல் எடுத்துக்கொள்ளலாம் என பேசியது குறித்த தகவலை கூறியிருக்கிறார்.
இதேபோல் தேர்தலில் போட்டியிட சீட்டு கிடைத்தாலும் கண்ணீர், சீட்டு கிடைக்காவிட்டாலும் கண்ணீர் பிரச்சாரத்திலும் கண்ணீர் என வேட்பாளர்களும் அரசியல் பிரமுகர்களும் விடும் கதறல் குறித்தும் பேசியிருக்கிறார் பிகே.
மேலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்புவின் சொத்து மதிப்பு குறித்த தகவலையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார் பிகே. இதேபோல் கமலும் சீமானும் அதிகம் விமர்சிக்கும் கட்சிகள் குறித்த தகவலையும் கூறியுள்ளார்.
இதேபோல் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் அண்ணன் தேர்தலில் போட்டியிடுவது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











