Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஸ்டாலின் முதல்வரானால் ஆற்றில் மணல் அள்ளலாம்.. செந்தில் பாலாஜி சர்ச்சை பேச்சு.. டாப் 5 பீட்ஸில்!
சென்னை: ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற அடுத்த நிமிஷமே ஆற்றில் மணல் எடுத்துக்கொள்ளலாம் என செந்தில் பாலாஜி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் தேர்தல் கள நிலவரம் குறித்த தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட செந்தில் பாலாஜி, ஸ்டாலின் முதல்வரானால் அடுத்த நிமிஷமே ஆற்றில் மணல் எடுத்துக்கொள்ளலாம் என பேசியது குறித்த தகவலை கூறியிருக்கிறார்.
இதேபோல் தேர்தலில் போட்டியிட சீட்டு கிடைத்தாலும் கண்ணீர், சீட்டு கிடைக்காவிட்டாலும் கண்ணீர் பிரச்சாரத்திலும் கண்ணீர் என வேட்பாளர்களும் அரசியல் பிரமுகர்களும் விடும் கதறல் குறித்தும் பேசியிருக்கிறார் பிகே.
மேலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்புவின் சொத்து மதிப்பு குறித்த தகவலையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார் பிகே. இதேபோல் கமலும் சீமானும் அதிகம் விமர்சிக்கும் கட்சிகள் குறித்த தகவலையும் கூறியுள்ளார்.
இதேபோல் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் அண்ணன் தேர்தலில் போட்டியிடுவது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.