Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வடிவேலு பொய் பிரச்சாரம் செய்கிறார்!- செந்தில்
மதுரை கிழக்கு அ.தி.மு.க., வேட்பாளர் தமிழரசனுக்கு ஆதரவாக ஒத்தக்கடை, ஆனையூர், அய்யர்பங்களாவில் பிரசார கூட்டங்களில் நடிகர் செந்தில் பேசினார்.
அவர், "விலைவாசி குறைய அ.தி.மு.க.,வுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். விஜயகாந்த் வேட்பாளரை தாக்கியதாக நடிகர் வடிவேலு பொய் பிரசாரம் செய்கிறார்.
தனிப்பட்ட விரோதத்தை மனதில் வைத்து, விஜயகாந்த்தை அவர் தாக்கி பேசுகிறார். இதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
தமிழர்கள் கொல்லப்பட்ட போது, மத்திய அரசை கருணாநிதி தட்டி கேட்கவில்லை. உயிருக்கு ஆபத்து என்றால் ஜெயலலிதா தான் என கனிமொழி குற்றம் சாட்டுவது வேடிக்கையானது," என்றார்.
நடிகர் செந்தில் பேசி கொண்டிருந்த போது, அவ்வழியாக வாகனங்களில் சென்ற பள்ளி சிறுவர், சிறுமியர் அவருக்கு கைகளை காட்டின.
உற்சாகமுற்ற செந்தில், இதுகளுக்கும் ஓட்டுரிமை கொடுத்திருக்கலாம். அம்மாவுக்கு ஓட்டுகளை அள்ளி தட்டிடுவாங்க. நீங்கள் எல்லாம் வீட்டிலேயே போய் அம்மா, அப்பா, பாட்டி, தாத்தாகிட்ட, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட சொல்லுங்க,'' என தன் பாணியில் பேச, கூட்டத்தில் ஒரே சிரிப்பலை.