Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கேமரா முன் வெட்கப்பட்ட சின்ன மச்சான்..பாத்தா அப்படி தெரியலையே..!
கேமரா முன்பு கூச்ச சுபாவம் இருந்ததாக செந்தில் கணேஷ் தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ் கேமராவிற்கு முன்பு கூச்ச சுபாவம் கொண்டவர் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டுப்புற பாடகரான செந்தில் கணேஷ் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்று டைட்டிலை கைப்பற்றினார். அதன்பிறகு வாய்ப்புகள் குவியத்தொடங்கின.
சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தில் பாடி அசத்தினார். அதேபோல மனைவியுடன் சேர்ந்து அவர் பாடிய சின்ன மச்சான் பாடல் மெஹா ஹிட்டானது.
சார்லி சாப்ளின்
சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தில் செந்திலும் அவர் மனைவி ராஜலட்சுமியும் இணைந்து பாடிய சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்து. குரு பெயர்ச்சி வருவதற்கு முன்பே அவர் வீட்டில் குரு குடித்தனம் போய்விட்டார் போல. பாடகராக கலக்க வந்தவர், ஒரு கலக்கு கலக்கி இப்போது நடிகராக மாறிவிட்டார்.
திட்டம்
செல்லத் தங்கையா இயக்கத்தில் கரிமுகன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் பற்றிப் பேசிய செந்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பே சினிமாவில் பணியாற்ற வேண்டுமென திட்டமிட்டதாகக் கூறுகிறார்.
சென்னை
செந்தில் நடித்துவரும் கரிமுகன் திரைப்படம் குடும்பப் பொழுதுபோக்குச் சித்திரமாக தயாராகிவருகிறது. அவரின் சொந்த ஊரான புதுக்கோட்டை அருகில் ஒரு கிராமத்தில் வசிக்கும் கதாநாயகன் தன்னுடை குடும்பப் பிரச்சனையை தீர்ப்பதற்காக சென்னை வரும்போது நடக்கும் விஷயங்களே படத்தின் கருவாகும்.
கூச்சம்
ரியாலிட்டி ஷோவில் பாடிக்கொண்டிருக்கும் போதே சந்து கேப்பில் சிந்து பாடுவதுபோல் ஐம்பது சதவிகித படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டனர். இப்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பொதுவாக மேடை நிகழ்ச்சிகளில் பாடும்போதே நாடகத்தனமான விஷயங்களைச் செய்வோம். ஆரம்ப காலத்தில் கேமரா முன்பு நடிக்க கூச்சமாக இருந்தது எனத் தெரிவித்தார்.
பாட்டும் நானே
கரிமுகன் படத்தை இயக்கும் தங்கையாவே இப்படத்திற்கு இசையும் அமைக்கிறார். இப்படத்தில் இரண்டு பாடல்களை செந்தில் பாடியிருக்கிறார். காயத்ரி என்ற கேரளப் பெண் செந்தில் கணேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.