Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கேமரா முன் வெட்கப்பட்ட சின்ன மச்சான்..பாத்தா அப்படி தெரியலையே..!
கேமரா முன்பு கூச்ச சுபாவம் இருந்ததாக செந்தில் கணேஷ் தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ் கேமராவிற்கு முன்பு கூச்ச சுபாவம் கொண்டவர் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டுப்புற பாடகரான செந்தில் கணேஷ் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்று டைட்டிலை கைப்பற்றினார். அதன்பிறகு வாய்ப்புகள் குவியத்தொடங்கின.
சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தில் பாடி அசத்தினார். அதேபோல மனைவியுடன் சேர்ந்து அவர் பாடிய சின்ன மச்சான் பாடல் மெஹா ஹிட்டானது.
சார்லி சாப்ளின்
சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தில் செந்திலும் அவர் மனைவி ராஜலட்சுமியும் இணைந்து பாடிய சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்து. குரு பெயர்ச்சி வருவதற்கு முன்பே அவர் வீட்டில் குரு குடித்தனம் போய்விட்டார் போல. பாடகராக கலக்க வந்தவர், ஒரு கலக்கு கலக்கி இப்போது நடிகராக மாறிவிட்டார்.
திட்டம்
செல்லத் தங்கையா இயக்கத்தில் கரிமுகன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் பற்றிப் பேசிய செந்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பே சினிமாவில் பணியாற்ற வேண்டுமென திட்டமிட்டதாகக் கூறுகிறார்.
சென்னை
செந்தில் நடித்துவரும் கரிமுகன் திரைப்படம் குடும்பப் பொழுதுபோக்குச் சித்திரமாக தயாராகிவருகிறது. அவரின் சொந்த ஊரான புதுக்கோட்டை அருகில் ஒரு கிராமத்தில் வசிக்கும் கதாநாயகன் தன்னுடை குடும்பப் பிரச்சனையை தீர்ப்பதற்காக சென்னை வரும்போது நடக்கும் விஷயங்களே படத்தின் கருவாகும்.
கூச்சம்
ரியாலிட்டி ஷோவில் பாடிக்கொண்டிருக்கும் போதே சந்து கேப்பில் சிந்து பாடுவதுபோல் ஐம்பது சதவிகித படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டனர். இப்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பொதுவாக மேடை நிகழ்ச்சிகளில் பாடும்போதே நாடகத்தனமான விஷயங்களைச் செய்வோம். ஆரம்ப காலத்தில் கேமரா முன்பு நடிக்க கூச்சமாக இருந்தது எனத் தெரிவித்தார்.
பாட்டும் நானே
கரிமுகன் படத்தை இயக்கும் தங்கையாவே இப்படத்திற்கு இசையும் அமைக்கிறார். இப்படத்தில் இரண்டு பாடல்களை செந்தில் பாடியிருக்கிறார். காயத்ரி என்ற கேரளப் பெண் செந்தில் கணேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!