Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
"எங்கிருந்து எவனோ வர்றானாம்".. செந்தில் ராஜலஷ்மி விழிப்புணர்வு பாடல் !
சென்னை : கிராமிய இசை பாடகர்களான செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலஷ்மி தற்போது கொரோனாவிற்கு எதிரான விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளனர் .
Recommended Video
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்ற பிறகு தொடர்ந்து சினிமா பாடல்களையும் பல விழிப்புணர்வு பாடல்களையும் மற்றும் பல இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வரும் செந்தில் ராஜலஷ்மி தம்பதி தற்போது கொரோனா தொற்றுக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்கள்.
பல முன்னனி பிரபலங்கள் முதல் சிறிய பிரபலங்கள் வரை கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில். தற்போது இந்த பாடலின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றுள்ளனர் செந்தில் ராஜலஷ்மி தம்பதி. இந்த பாடலை வழக்கம் போல அவர்களின் ஸ்டைலில் கிராமிய பாடலாக உருவாக்கி உள்ளனர்
இந்த பாடலில் கத்தியை தீட்ட வேண்டாம் புத்தியை தீட்டுங்கள் என வலியுறுத்தி உள்ளனர். ஏனெனில் கொரோனா என்பது கொடிய மனிதன் இல்லை கொடிய வைரஸ். இதை எதிர்க்க கத்தி தேவையில்லை புத்தி தான் தேவை என்று பாடலில் அழகாக கூறியுள்ளனர் .
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது செய்யபடும் வழிமுறைகள் நாம் கடைபிடித்து வந்ததே. வெளியே சென்று வீடு திரும்பியதும் கை கழுவுதள் , மஞ்சள் மற்றும் வேப்பிலை பயன்படுத்துதல் போன்றவை முன்னோர்கள் கூறி வந்தவை. இதை நாம் இப்போது செய்து கொரோனாவை துறத்தி அடிக்கலாம் என்று பாடல் வாயிலாக கூறியுள்ளனர் .
சினிமா பாடல்களை தவிர்த்து தனிப்பட்ட பல கிராமிய பாடல்களை பாடி வரும் செந்தில் மற்றும் ராஜலஷ்மி தம்பதி. தற்போது "எங்கிருந்து எவனோ வர்றானாம்" பாடலின் மூலம் மீண்டும் தங்களின் கிராமிய பாடல் வளத்தை நிரூபித்து உள்ளனர் .
இந்திய அரசு வரும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் சிலர் அறியாமையால் ஊர் சுற்றியும் சுத்தம் பற்றியும் சரியான கவனம் இன்றி திரிந்து வருகின்றனர். அவர்களை இந்த பாடல் சென்று சேர்ந்து சரியான விழப்புணர்வை ஏற்படுத்தும் என்பது பலரின் நம்பிக்கை.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
ஊரே இளையராஜா பாட்டு கேட்கும்.. ஆனால் அவரோ.. இயக்குநர் சொன்ன சுவாரஸ்யமான விஷயம்
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்