Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உங்க செல்லம்மா வந்திருக்கேன், ஓட்டுபோடுங்க: சென்டிமென்ட்டாய் மடக்கும் ராதிகா
தென்காசி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரான சரத்குமாரை ஆதரித்து அவரது மனைவி ராதிகா பிரசாரம் செய்தார். நகரின் முக்கிய இடங்களில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும். தென்காசி தொகுதியி்ல் சமக தலைவரும், எனது கணவருமான சரத்குமார் போட்டியிடுகிறார். இது எனக்கு பெருமையாக உள்ளது.
தென்காசிக்கு அடிக்கடி நான் வர வேண்டி இருப்பதால் இங்கு வீடும், அலுவலகமும் பார்த்து வருகிறோம். அதி்முக தேர்தல் அறிக்கையில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், பெண்களுக்கு மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மானியத்துடன் ரூ. 10 லட்சம் கடனுதவி போன்றவை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து எனது கணவரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.
முன்னதாக அவர் எல்ஆர்எஸ் பாளையத்தில் ரயில்வே மேட்டு தெரு, ரதவீதி, வாலிபன் பொத்தை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு நின்ற பெண்களிடம் ராதிகா நான் உங்கள் செல்லம்மா (சீரியல்) வந்துள்ளேன். இரட்டை இலைக்கு ஓட்டு போடு்ங்கள் என்றார்.