Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உங்க செல்லம்மா வந்திருக்கேன், ஓட்டுபோடுங்க: சென்டிமென்ட்டாய் மடக்கும் ராதிகா
தென்காசி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரான சரத்குமாரை ஆதரித்து அவரது மனைவி ராதிகா பிரசாரம் செய்தார். நகரின் முக்கிய இடங்களில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும். தென்காசி தொகுதியி்ல் சமக தலைவரும், எனது கணவருமான சரத்குமார் போட்டியிடுகிறார். இது எனக்கு பெருமையாக உள்ளது.
தென்காசிக்கு அடிக்கடி நான் வர வேண்டி இருப்பதால் இங்கு வீடும், அலுவலகமும் பார்த்து வருகிறோம். அதி்முக தேர்தல் அறிக்கையில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், பெண்களுக்கு மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மானியத்துடன் ரூ. 10 லட்சம் கடனுதவி போன்றவை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து எனது கணவரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.
முன்னதாக அவர் எல்ஆர்எஸ் பாளையத்தில் ரயில்வே மேட்டு தெரு, ரதவீதி, வாலிபன் பொத்தை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு நின்ற பெண்களிடம் ராதிகா நான் உங்கள் செல்லம்மா (சீரியல்) வந்துள்ளேன். இரட்டை இலைக்கு ஓட்டு போடு்ங்கள் என்றார்.