Don't Miss!
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உங்க செல்லம்மா வந்திருக்கேன், ஓட்டுபோடுங்க: சென்டிமென்ட்டாய் மடக்கும் ராதிகா
தென்காசி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரான சரத்குமாரை ஆதரித்து அவரது மனைவி ராதிகா பிரசாரம் செய்தார். நகரின் முக்கிய இடங்களில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும். தென்காசி தொகுதியி்ல் சமக தலைவரும், எனது கணவருமான சரத்குமார் போட்டியிடுகிறார். இது எனக்கு பெருமையாக உள்ளது.
தென்காசிக்கு அடிக்கடி நான் வர வேண்டி இருப்பதால் இங்கு வீடும், அலுவலகமும் பார்த்து வருகிறோம். அதி்முக தேர்தல் அறிக்கையில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், பெண்களுக்கு மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மானியத்துடன் ரூ. 10 லட்சம் கடனுதவி போன்றவை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து எனது கணவரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.
முன்னதாக அவர் எல்ஆர்எஸ் பாளையத்தில் ரயில்வே மேட்டு தெரு, ரதவீதி, வாலிபன் பொத்தை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு நின்ற பெண்களிடம் ராதிகா நான் உங்கள் செல்லம்மா (சீரியல்) வந்துள்ளேன். இரட்டை இலைக்கு ஓட்டு போடு்ங்கள் என்றார்.