Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
குறும்படம், டிஜிட்டல் படங்களுக்காக புதுபட அதிபர் சங்கம்!
சென்னை: தமிழ் சினிமாவில், டிஜிட்டல், குறும்பட மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர் நல சங்கம் என்ற பெயரில் புதுபட அதிபர்கள் சங்கம் உருவாகியுள்ளது.
இச்சங்கத்தின் தலைவராக கலைப்புலி சேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த சங்கம் குறித்து கலைப்புலி சேகரன் கூறுகையில், "திரைப்படத்துறை டிஜிட்டல் மயமாகியுள்ளதால் பத்து லட்சம் ரூபாய்க்கும் படம் எடுக்க முடிகிறது. இப்படி எடுக்கப்படும் சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வதில்தான் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. தியேட்டர்களும் கிடைப்பதில்லை. எனவே சிறு பட்ஜெட் மற்றும் குறும்படம் ஆவண பட தயாரிப்பாளர்கள் நலனுக்காக இச்சங்கம் துவங்கப்பட்டுள்ளது.
குறும்பட ஆவண படங்களை இச் சங்கத்தில் பதிவு செய்யலாம். இச்சங்கத்தில் இருந்தவர்கள் எடுக்கும் படங்களில் யார் வேண்டுமானாலும் பணியாற்றலாம். சுதந்திரமான அமைப்பாக இது செயல்படும். அரசிடம் பதிவும் செய்யப்பட்டுள்ளது," என்றார்.
தமிழ் இலக்க திரைப்பட குறும்பட ஆவண பட தயாரிப்பாளர் சங்க துவக்க விழாவில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண், தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர்.மற்றும் டி.ஜி.தியாகராஜன், ஞானவேல்ராஜா, தியாராஜன், அருள்பதி, ஜாகுவார் தங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.