Don't Miss!
- News வரிசையில் நின்று வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி.. ஓட்டு போட்ட பின்னர் வைத்த முக்கிய கோரிக்கை!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழ் சினிமாவைப் பிடித்தாட்டும் பார்ட் 2 மோகம்
சென்னை: பேய்களிடம் இருந்து தப்பித்து பார்ட் 2 மோகத்தில் தற்போது மாட்டிக் கொண்டுள்ளது தமிழ் சினிமா. ஒரு படம் வெற்றி பெற்றால் அந்தப் படத்தின் அடுத்த பாகங்களை எடுக்கும் பழக்கம் ஹாலிவுட்காரர்களிடம் அதிகம் உண்டு.
இந்திய சினிமாவைப் பொறுத்தவரை இந்தியில் இது போன்ற முயற்சிகள் சற்று அதிகம் உண்டு, ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் பார்ட் 2 படங்களை எடுக்கும் வேகத்தைப் பார்த்தால் தமிழில் வெற்றி பெற்ற அனைத்து படங்களின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து விட்டுத் தான் ஓய்வார்கள் போல.
அத்தி பூத்தார் போன்று அவ்வப்போது ஒன்றிரண்டு படங்கள் இரண்டாம் பாகமாக எடுத்து வந்த நிலையில், ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தின் கவனமுமே வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் தற்போது குதித்து இருக்கிறது.
இதுவரை வெளிவந்த இரண்டாம் பாகங்கள்
நான் அவன் இல்லை, சிங்கம், பில்லா, அமைதிப்படை, காஞ்சனா போன்ற படங்கள் இதுவரை தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகங்களாக எடுக்கப் பட்டு உள்ளன.
வரவிருக்கும் படங்கள்
விஸ்வரூபம், வேலை இல்லாப் பட்டதாரி, சண்டக் கோழி, கோ, என் ராசாவின் மனசிலே, ஜித்தன், மணல் கயிறு, அமரன், எந்திரன், மங்காத்தா, பருத்திவீரன், இந்தியன் போன்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது வேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றன கோடம்பாக்கத்தில்.
இரண்டாம் பாகத்திலும் பேய்களின் ஆதிக்கம்
பேய்களின் பிடியில் இருந்து இப்பொழுது தான் தமிழ் சினிமா மீண்டிருக்கிறது என்று நினைப்பவர்கள் அந்த நினைப்பை அழித்து விடுங்கள் ஏனெனில், இரண்டாம் பாகத்திலும் பேய்களின் நடமாட்டம் சற்று அதிகமாகவே உள்ளது. யாமிருக்க பயமே, அரண்மனை மற்றும் டார்லிங் போன்ற படங்களின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்க வருகின்றன பேய்கள்.
புதிய படங்களுக்கு போட்டியாக பழைய படங்கள்
புதிய படங்களுக்குப் போட்டியாக சிறு வயதில் நாம் தூர்தர்சனில் பார்த்து ரசித்த அமரன் , என் ராசாவின் மனசிலே மற்றும் மணல் கயிறு போன்ற படங்களும் இரண்டாம் பாகமாக எடுக்கப் படவிருக்கின்றன.
லிங்குசாமியின் பார்ட் 2 மோகம்
தமிழ் சினிமாவில் குறிப்பிடத் தகுந்த இயக்குனர்களில் ஒருவரான லிங்குசாமியையும் இந்த மோகம் விட்டு வைக்கவில்லை போல சண்டக்கோழி, பையா போன்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க விருக்கிறார்.
அதுக்கும் மேல
ஐ படத்தில் விக்ரம் சொல்வாரே அதுக்கும் மேல என்று அதே போல தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களைத் தொடர்ந்து படங்களின் மூன்றாம் பாகங்களையும் எடுத்து வருகிறார்கள். காஞ்சனா 3 படத்தைத் தொடர்ந்து, சூர்யாவின் நடிப்பில் சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!