திருமணமான அடுத்த நாளே வேறொருவருடன் பேச்சு...சம்யுக்தா பற்றி புட்டுபுட்டு வைத்த விஷ்ணுகாந்த்!
சென்னை : சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த், சம்யுக்தா குறித்து பல தகவல்களை பேட்டியில் புட்டு புட்டு வைத்துள்ளார்.
சீரியல் நடிகை சம்யுக்தாவும், விஷ்ணுகாந்த்தும் திருமணமான ஒரே மாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை போட்டு பிரிந்து விட்டனர்.
இவர்கள் இருவரின் பஞ்சாயத்துதான் சோஷியல் மீடியாவில் பேசு பொருளாக மாறி உள்ளது.

காதல் திருமணம் : விஜய் டிவியில் பாவம் கணேசன், சிப்பிக்குள் முத்து ஆகிய சீரியல்களில் நடித்த சம்யுக்தா, ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்து ஒரு மாதம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் தற்போது பிரிந்துவிட்டனர்.
24 மணி நேரமும் அதுவேணும் : விவாகரத்து முடிவு குறித்து இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய சம்யுக்தா, 24 மணி நேரமும் அவருக்கு அது வேண்டும். சாப்பிடுவதற்கு, தூங்குவதற்கு என்று எல்லாவற்றுக்கும் தனித்தனியாக நேரம் இருக்கு ஆனால், 24 மணிநேரமும் அவருக்கு அதே நினைப்பு தான்.சின்ன பெண் என்று கூட பார்க்கவில்லை என்று பேசி இருந்தார்.

ஏமாற்றிவிட்டார் : இந்நிலையில், நடிகை ஷகிலா, விஷ்ணுகாந்திடம் பேட்டி எடுத்துள்ளார். அதில் பல கேள்விகளுக்கு பதில் அளித்த விஷ்ணுகாந்த், திருமணத்திற்கு முன்பு அப்பா என்னுடன் இல்லை, அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். அவருடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்பதால், திருமணத்திற்கு வரமாட்டார் என்றார். ஆனால், கல்யாணத்திற்கு வந்தார்.
டென்ஷன் ஆனேன் : அப்போது மகளின் திருமணத்திற்காக வந்து இருக்கிறார் என்று நினைத்தேன். கல்யாணம் எங்கள் முறைப்படியே பண்ணலாம் என்று சொன்னவர்கள் மாற்றி மாற்றி பேசினார்கள். அதில் இருந்த பிரச்சனை தொடங்கியது. அப்போதே நான் டென்ஷனாகிவிட்டேன் யாரிடமும் பேசாமல் இருந்தேன். ஆனால், நான் சம்யுக்தாவை ரொம்பவும் நம்பினேன்.

வேறொருவருடன் பேச்சு : முதல் இரவு யார் வீட்டில் வைப்பது என்பதே பெரிய பஞ்சாயத்தாக ஆனது. இதனால், யாருக்கும் பிரச்சனை வராமல் ஹோட்டலில் வைத்தோம். அப்போது காலையில் எழுந்ததுமே, ஒரு பிரண்ட் கூட பேசுனாங்க, ஏற்கனவே அந்த பெண்ணால எங்களுக்குள் பிரச்சனை, அதுவும் இல்லாமல் அந்த பெண், ஆண் போல நடந்துகொள்வாள் என்று சம்யுக்தா சொல்லி இருக்கிறாள். இதனால்தான் அந்த பெண்கூட பேசாதே என்றேன். ஆனால், சம்யுக்தா என்னைவிட அந்த பெண் தோழிதான் வேண்டும் என்கிறார் என்று விஷ்ணுகாந்த் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











