Don't Miss!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நடிகர்களை மட்டும் விமர்சிப்பது ஏன்.. பயில்வான் ரங்கநாதனை விளாசிய ஆல்யா மானசா !
சென்னை : சின்னத்திரை நடிகை ஆலியா மானசா, பயில்வான் ரங்கநாதனுக்கு எதிராக ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூலமாக பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். சீரியலில் காதலர்களாக நடித்து நிஜ காதலர்களாக மாறி விட்டனர்.
சீரியலில் காதலிப்பவர்கள் திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல ஆனால் இவர்கள் திருமணம் முடிந்தாலும் என்றும் காதலர்களாகத்தான் வாழ்ந்து வருகின்றனர்
விக்ரம் படத்தில் ஒரே சீன் தான் - சோஷியல் மீடியாவில் டிரெண்டாகிவிட்ட நடிகை!
ஆலியா மானசா
இந்த நட்சத்திர ஜோடிக்கு ஐலா என்ற மகள் உள்ளார். இதையடுத்து அவருக்கு கடந்த மார்ச் மாதம் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அர்ஷ் என பெயர் சூட்டியுள்ளார்கள். ராஜா ராணி சீரியல் 2 வில் நடித்து வந்த ஆல்யா, 2ஆவது குழந்தை பிறந்ததை அடுத்து அந்த சீரியலிலிருந்து விலகினார். இரண்டுமாத ஓய்வுக்கு பிறகு மீண்டும் ஆக்வாக மாறி உள்ளார்.
வேதனை அடைகிறது.
இந்நிலையில், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குத்து விளக்கை ஏற்றி வைத்து பேசிய ஆலியா மானசா. அதில், நடிகர் மற்றும் நடிகைகளை பற்றி பயில்வான் ரங்கநாதன் அவதூறாக பேசுவதை கேட்கும் போது மனம் மிகவும் வேதனை அடைகிறது. இது போன்ற சம்பவங்களால் நான் நேரடியாக பாதிக்கப்படவில்லை.
தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு
இருந்தாலும், இந்த மாதிரியான வீடியோக்களை நான் பார்க்கும் போது மனவேதனை அடைகிறன். அதில் பேசு பொருளாக இருக்கும் நடிகர்களுக்காக வருந்துகிறேன். எல்லோருக்குமே தனிப்பட்ட வாழ்க்கை என்ற ஒன்று இருக்கிறது. சரி தவறு என்பதைத் தாண்டி அவர்களுடைய விருப்பப்படி வாழ்வது அவர்களது உரிமை; அதில் நாம் தலையிட முடியாது.
நாங்களும் மனிதர்கள் தான்
சினிமா துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலுமே இதுபோன்ற தனிப்பட்ட உறவுகள் இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது, நடிகர்களது விஷயத்தை மட்டும் ஏன் இவ்வளவு பெரிதுபடுத்தி பொது வெளியில் பேச வேண்டும்? நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு. நடிகர் பயில்வான் ரங்கநாதன் இவ்வாறு பேசுவது வருத்தமளிப்பதாக ஆலியா மானசா அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.