Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நானும் என் கணவரும் நல்லத்தான் இருக்கிறோம்… வதந்திகளை நம்ப வேண்டாம.. ரேகா
Recommended Video
சென்னை: என் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சமூக வலைதளங்களில் பரவும் செய்தி பொய்யானது என்று சின்னத்திரை நடிகை ரேகா வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகைகளில் பல ரேகாக்கள் உள்ளனர். அதில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடித்து வரும் ரேகாவின் கணவர் அதாவது அவர் கடன் தொல்லை மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வேகமாக பரவியது.
இந்த செய்தி தவறானது என்றும் அந்த ரேகா நான் இல்லை, அவர் வேறு ரேகா என்றும் நடிகை ரேகா வீடியோ மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார். நான் தான் வதந்திகளில் கூறப்படும் ரேகா எனக்கும் என் கணவருக்கும் எதுவும் நடக்கவில்லை. மற்றும் பரவப்படும் செய்தி முற்றிலும் தவறானது என்றும் அது வேறு ஒரு ரேகாவின் கணவர் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
எந்த ரேகாவுக்கு என்ன நடந்தது , அவரது கணவருக்கு என்ன நடந்தது என்பதும் எனக்கும் தெரியாது. அதுவும் பொய்யாக கூட இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். நான் என் கணவர் இரண்டு பேரும் நல்லாத்தான் இருக்கிறோம் என்றார்.
என் காதல் பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கக் கூடாது... ஆண்ட்ரியா
சமூக வலை தளங்களில் இது போன்ற செய்திகள் பரப்புவது முற்றிலும் தவறானது மற்றும் இது போல நடப்பது இது முதல் முறை அல்ல இதற்கு முன்பு நடிகர் மோகன் மற்றும் காமெடி நடிகர் கவுண்டமணி போன்றவர்கள் பற்றி தவறான செய்தி பரவப்பட்டது. இன்டர்நெட் உலகத்தில் அதி பயங்கர பிளாஷ் நியூஸ் பரவி விடுகிறது. இது உண்மையா பொய்யா என்று பார்ப்பதற்குள் அவை தீயாக பரவிவிடுகிறது.