நானும் என் கணவரும் நல்லத்தான் இருக்கிறோம்… வதந்திகளை நம்ப வேண்டாம.. ரேகா
Recommended Video
சென்னை: என் கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சமூக வலைதளங்களில் பரவும் செய்தி பொய்யானது என்று சின்னத்திரை நடிகை ரேகா வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகைகளில் பல ரேகாக்கள் உள்ளனர். அதில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடித்து வரும் ரேகாவின் கணவர் அதாவது அவர் கடன் தொல்லை மற்றும் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வேகமாக பரவியது.

இந்த செய்தி தவறானது என்றும் அந்த ரேகா நான் இல்லை, அவர் வேறு ரேகா என்றும் நடிகை ரேகா வீடியோ மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார். நான் தான் வதந்திகளில் கூறப்படும் ரேகா எனக்கும் என் கணவருக்கும் எதுவும் நடக்கவில்லை. மற்றும் பரவப்படும் செய்தி முற்றிலும் தவறானது என்றும் அது வேறு ஒரு ரேகாவின் கணவர் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
எந்த ரேகாவுக்கு என்ன நடந்தது , அவரது கணவருக்கு என்ன நடந்தது என்பதும் எனக்கும் தெரியாது. அதுவும் பொய்யாக கூட இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். நான் என் கணவர் இரண்டு பேரும் நல்லாத்தான் இருக்கிறோம் என்றார்.
சமூக வலை தளங்களில் இது போன்ற செய்திகள் பரப்புவது முற்றிலும் தவறானது மற்றும் இது போல நடப்பது இது முதல் முறை அல்ல இதற்கு முன்பு நடிகர் மோகன் மற்றும் காமெடி நடிகர் கவுண்டமணி போன்றவர்கள் பற்றி தவறான செய்தி பரவப்பட்டது. இன்டர்நெட் உலகத்தில் அதி பயங்கர பிளாஷ் நியூஸ் பரவி விடுகிறது. இது உண்மையா பொய்யா என்று பார்ப்பதற்குள் அவை தீயாக பரவிவிடுகிறது.


Click it and Unblock the Notifications











