மாராப்பை இறக்கி விட்டுத்தான் புடவை கட்டுவேன்.. அது என் விருப்பம்.. இறங்கி அடித்த ரேகா நாயர்!
சென்னை: மாராப்பை இறக்கி விட்டு புடவை கட்டுவதை நான் கலையாக பார்க்கிறேன் அதுல உனக்கு என்ன பிரச்சனை என்ற நடிகை ரேகா நாயர் கூறியுள்ளார்.
பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் திரைப்படத்தில் ராணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரேகா நாயர். அந்த படத்தில் ஒரு காட்சியில் மார்பகத்தைக்காட்டி அரைநிர்வாணமாக நடித்திருந்ததால், பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

நடிகை ரேகா நாயர்: இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த ரேகா நாயர், அதில், நான் என்ன உடை அணிய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன். காலையில் வாக்கிங் செல்லும் போது, டவுசர் போட்டுக்கொண்டுதான் செல்வேன், 7, 8 மணி வரை அதே உடையில் தான் இருப்பேன். ஆனால், அந்த உடையை போட்டுக்கொண்டு நான் தி நகருக்கோ, மாலுக்கோ போனால், மற்றவர்கள் கை வைக்கத்தான் செய்வார்கள். அந்த இடத்திற்கு அந்த ஆடையை போட்டுக்கொண்டு சென்றது யாருடைய தப்பு.

மாராப்பை விலக்கி: அதே போல, நான் மாராப்பை இறக்கிவிட்டுத்தான் புடவை கட்டுவேன் அது என்னுடைய ஸ்டைல், இதை நான் அழகியலாக பார்க்கிறேன். இதை ஆண்கள் ரசிக்கிறார்கள் இதில் என்ன தப்பு இருக்கிறது. நான் பெரிய கம்மல் போட்டா எப்படி நன்றாக இருக்கிறது என்று மற்றவர்கள் சொல்லுகிறார்களோ அதே போலத்தான் என் அழகையும் ரசிக்கிறார்கள். இதில் தப்பே இல்லை என்று நடிகை ரேகா நாயர் பேட்டியில் கூறியிருந்தார்.

விவஸ்தை கெட்ட பொம்பளை: பயில்வான் ரங்கநாதனுக்கும் ரேகா நாயருக்கும் ஏற்கனவே பஞ்சாயத்து இருக்கும் நிலையில், ரேகா குறித்து பேசி இருந்த பயில்வான் ரங்கநாதன், அவர் ஒரு விவஸ்தை கெட்ட பொம்பளை, உணர்ச்சியே இல்லாத ஜென்மம், பெண் இனத்தையே இழிவுப்படுத்துவது போல அவர் பேசி வருகிறார் என்று அவரைப்பற்றி கடுமையாக விமர்சித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications











