முத்திப்போன டிக்டாக் மோகம்.. பட்டப்பகலில் வெட்டவெளியில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை!
Recommended Video
சென்னை: டிக்டாக் ஆர்வத்தில் சீரியல் நடிகை ஒருவர் வெளியிட்டிருக்கும் குளியல் வீடியோ வைரலாகி வருகிறது.
முன்னணி தனியார் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் சரண்யா. சீரியல் வாய்ப்புகள் வரவே செய்தி வாசிப்புக்கு டாடா சொன்ன அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்தார்.
இதன் மூலம் பிரபலமான நடிகை சரண்யா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரன் சீரியலில் நடித்து வருகிறார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள சரண்யா, நினைக்கும்போதெல்லாம் தனது அசத்தல் போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடிப்பார்.

குளிக்கும் வீடியோ
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. அதாவது சரண்யா, வெட்ட வெளியில் பம்பு செட்டில் பட்டப்பகலில் குளிக்கும் டிக்டாக் வீடியோவை வெளியிட்டு அதிர வைத்துள்ளார்.

முத்திப்போச்சா
அவரது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சிலர் இந்த அளவுக்கு முத்திப்போச்சா என கேட்டு வருகின்றனர்.

வாய்ப்பு
அதே நேரத்தில் சிலர், வாவ்... வாட் எ பியூட்டி என வர்ணித்து வருகின்றனர். அண்மைக்காலமாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகளும் பட வாய்ப்புக்காக ஓவர் கிளாமரில் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
டிக்டாக் மோகம்
அவை சமூக வலைதளங்களில் வைரலாவதும் அதற்கு நெட்டிசன்கள் கமென்ட் தெரிவித்து வருவதும் வாடிக்கையாகி விட்டது. இளம் பெண்களும் இளைஞர்களும் டிக்டாக் செயலியால் பிரபலமாகி வரும் நிலையில் பிரபலங்களும் டிக்டாக் மோகத்திற்கு அடிமையாகிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











