Don't Miss!
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சிம்புக்கு லவ் டார்ச்சர் கொடுத்த நடிகை..சாரி அண்ணா மன்னிச்சிடுங்க..பேட்டியில் அந்தர் பல்டி!
சென்னை : கல்யாணம் பண்ணா சிம்புவைத்தான் பண்ணுவேன் என்று அவர் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சீரியல் நடிகை, இப்போ அவர் அண்ணன் மாதிரி என்று பேட்டியில் கூறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7சி என்ற சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் குழந்தை நட்சத்திரமாக பல சீரியல்களில் நடித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
மீண்டும் அந்த ரிஸ்க்கை எடுக்கும் சிம்பு.. எல்லாம் அந்த நம்பிக்கை தான்.. பத்து தல அப்டேட்!
ஸ்ரீநிதி
பார்ப்பதற்கு கொழுக்கு மொழுக்குனு க்யூட்டாக இருக்கும் ஸ்ரீநிதி வலிமை திரைப்படம் குறித்து ஏடாகூட கருத்தை தெரிவித்து வம்பில் சிக்கினார். இதனால் அஜித் ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டினர். பலர் திட்டுவதை வைத்தே பிரபலமாகிவிடலாம் என நினைத்த ஸ்ரீநிதி. சிம்பு என்னை காதலிக்கிறார். எனக்காகத்தான் அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று அடுக்கடுக்காக கூறி வந்தார். இதனால், சிம்பு ரசிகர்கள் கடுப்பாகி கொலை மிரட்டலே விடுத்தனர்.
வீட்டின் முன் தர்ணா
இதையடுத்து, திடீரென ஒருநாள், கல்யாணம் பண்ணா சிம்புவைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சிம்பு வீட்டுக்கு முன்பு தர்ணா செய்தார். எங்களது திருமணத்திற்கு சிம்புவின் அப்பா தான் தடையாக இருக்கிறார் என வாய்க்கு வந்த படி பேசி வந்தார். இதனால், பலரும் இவர் மனதளவில் ஏதோ பாதிக்கப்பட்டுள்ளார் என கூறினர்.
மீண்டும் பழையபடி
இதையடுத்து, நடிகை ஸ்ரீநிதிக்கு சென்னை புறநகரான புழல் பகுதியில் உள்ள ஒரு சிகிச்சை மையத்தில் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கவுன்சிலிங் நிச்சயம் அவருக்கு மாற்றத்தை தரும் என்பதால் அங்கேயே தங்கி கவுன்சிலிங் எடுத்துக்கொண்டு, தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.
சிம்பு அண்ணா மாதிரி
இந்நிலையில்,யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஸ்ரீநிதி, சிம்பு எனக்காகத்தான் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று நானே கற்பனை செய்து கொண்டேன். ஆனால், சிம்பு மீது எனக்கு லவ் இல்லை, அவரை எனக்கு பிடிக்கும் அவர் எனக்கு அண்ணா மாதிரி என்று அந்தர் பல்டி அடித்தார். மேலும், சாரி சிம்பு அண்ணா என்னை மன்னிச்சிடுங்க, நான் மன அழுத்தத்தில் இருந்ததால் அப்படி நடந்து கொண்டேன் என் நிலைமையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் என்றார்.
போதை மருந்து எடுத்துக்கொண்டேன்
சிறுவயதில் இருந்து குடும்பத்திற்காக உழைத்து வருகிறேன். இப்போது தான் எனக்கான ஓய்வை எடுத்துக்கொண்டு இருக்கிறேன். நான் போதை மருந்துக்கு அடிமை இல்லை. ஆனால், அந்த போதை மருந்து எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருக்கு. அந்த மருந்தை எடுத்துக்கொண்டால் ஒல்லியாகலாம் என்றார்கள் அதனால் அதை பயன்படுத்தினேன் என்றார்.மேலும்,அம்மா இப்போது தேங்காய் வியாபாரம் செய்வதாகவும் அந்த பேட்டியில் சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் பதில் அளித்துள்ளார். இதை பார்க்கும் போது ஸ்ரீநிதி இன்னும் பழையபடி மனஅழுத்தத்தில் தான் இருக்கிறார் என்பது தெரிகிறது.