பையா.. பப்பு.. கொஞ்சிக்கொண்ட சீரியல் ஜோடி மகாலட்சுமி - ஈஸ்வர்.. வைரலாகும் போட்டோ!
Recommended Video
சென்னை: சீரியல் நடிகை மகாலட்சுமியும் நடிகர் ஈஸ்வரும் ஒருவரை ஒருவர் கொஞ்சிக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.
சின்னத்திரையை பொறுத்தவரை தற்போது டாக் ஆஃப் த டவுனாக இருப்பது சீரியல் நடிகை ஜெயஸ்ரீயின் விவகாரம்தான். வம்சம் சீரியலில் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு வில்லியாக நடித்து புகழ் பெற்றார் ஜெயஸ்ரீ.
தொடர்ந்து பல சீரியல்களில் நடித்துள்ளார் ஜெயஸ்ரீ. இவருடைய கணவர் ஈஸ்வர். இவரும் சீரியல் நடிகர் ஆவார்.

மனைவி குற்றச்சாட்டு
இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தற்போது ஈஸ்வருடன் சீரியலில் நடித்து வரும் நடிகை மகாலட்சுமியுடன் அவர் கள்ளத் தொடர்பில் உள்ளதாக அவரது மனைவி ஜெயஸ்ரீ குற்றம்சாட்டியுள்ளர்.

விவாகரத்து
பிரபல டிவி சேனலில் தொகுப்பாளினியாக இருந்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர் மகாலட்சுமி. ஏற்கனவே கணவருடன் தகராறில் உள்ள மகாலட்சுமி விவாகரத்து கேட்டிருப்பதாக தெரிகிறது.

போலீஸில் புகார்
இந்நிலையில் ஈஸ்வரும் தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டு அடித்து கொடுமை படுத்தியதாக தெரிகிறது. இதில் தாக்கப்பட்ட ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட மருத்துவமனை நிர்வாகமே அவரது கணவர் தாக்கியதாக போலீஸில் புகார் அளித்தது.

அதிர வைக்கும் தகவல்கள்
இதுதொடர்பாக ஈஸ்வரும் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மகாலட்சுமி குறித்து பல அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பையா.. பப்பு..
ஈஸ்வரும் மகாலட்சுமியும் தனது கண் முன்னே வீடியோ காலில் கொஞ்சி கொஞ்சி பேசியதாக குற்றம் சாட்டியிருந்தார் ஜெயஸ்ரீ. இந்நிலையில் ஃபேஸ்புக்கில் இருவரும் பையா.. பப்பு.. என கொஞ்சிக்கொள்ளும் போட்டோ வைரலாகி வருகிறது.

தேங்க்யூ பப்பு..
அதில் செம டா பையா என மகாலக்ஷ்மி பதில் அளிக்க, தேங்க்யூ பப்பு என ஈஸ்வர் செல்லமாக ரிப்ளை செய்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











