Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
படப்பிடிப்பில் பங்கேற்ற 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. ஷூட்டிங் திடீர் நிறுத்தம்!
ஐதராபாத்: கொரோனா பாதிப்பு காரணமாக அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.
அல வைகுந்தபுரம்லோ படத்தின் ஹிட்டுக்கு பிறகு அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படம், புஷ்பா.
இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். சுகுமார் இயக்குகிறார். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
பான் இந்தியா
இதன் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழிகளில் உருவாகிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது.
பாலிவுட் வில்லன்
இதில் விஜய் சேதுபதி, வன அதிகாரியாக நடிக்கிறார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் விலகினார். நடிகர் பாபி சிம்ஹாவும் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் எதுவும் உறுதியாகவில்லை. இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.
செம்மரக் கடத்தல்
அவர் யார் என்பதை படக்குழு தெரிவிக்கவில்லை. விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டது. கொரோனாவால் தடைபட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.
Recommended Video
கூட்டம் காரணமாக
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மரேடுமிலி காடுகளில் படப்பிடிப்பு தொடங்கியது. கொரானோவைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு வழிமுறைகளை படக்குழுவினர் பின்பற்றியும் அதிக கூட்டம் காரணமாக, சுமார் 10 பேருக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டது. அதை உறுதி செய்த பின் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.