Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
படப்பிடிப்பில் பங்கேற்ற 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. ஷூட்டிங் திடீர் நிறுத்தம்!
ஐதராபாத்: கொரோனா பாதிப்பு காரணமாக அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.
அல வைகுந்தபுரம்லோ படத்தின் ஹிட்டுக்கு பிறகு அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படம், புஷ்பா.
இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். சுகுமார் இயக்குகிறார். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
பான் இந்தியா
இதன் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள மொழிகளில் உருவாகிறது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது.
பாலிவுட் வில்லன்
இதில் விஜய் சேதுபதி, வன அதிகாரியாக நடிக்கிறார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் விலகினார். நடிகர் பாபி சிம்ஹாவும் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் எதுவும் உறுதியாகவில்லை. இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.
செம்மரக் கடத்தல்
அவர் யார் என்பதை படக்குழு தெரிவிக்கவில்லை. விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டது. கொரோனாவால் தடைபட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.
Recommended Video
கூட்டம் காரணமாக
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மரேடுமிலி காடுகளில் படப்பிடிப்பு தொடங்கியது. கொரானோவைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு வழிமுறைகளை படக்குழுவினர் பின்பற்றியும் அதிக கூட்டம் காரணமாக, சுமார் 10 பேருக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டது. அதை உறுதி செய்த பின் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.