Don't Miss!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நோட்டா ஹீரோயின்
Recommended Video
ஹைதராபாத்:நடிகை மெஹ்ரீன் பிர்சாதாவிடம் அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகள் 30 நிமிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
தெலுங்கு, கன்னட நடிகைகளை கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருமாறு அழைத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிகாகோவில் வசித்து வந்த தெலுங்கு படங்களை தயாரித்த கிஷன் மற்றும் அவரின் மனைவி சந்திரா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஷூட்டிங்
தெலுங்கு படங்களில் நடித்து வரும் மெஹ்ரீன் பிர்சாதா கனடாவின் வான்கூவர் நகரில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். கனடாவில் நடந்த தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொண்ட பிறகு தனது குடும்பத்தாரை சந்திக்க அமெரிக்கா சென்றுள்ளார்.
விசாரணை
அமெரிக்க விமான நிலையத்தில் மெஹ்ரீன் தான் ஒரு நடிகை அதுவும் தெலுங்கு நடிகை என்று கூறியதும் குடியேற்றத் துறை அதிகாரிகள் அவரிடம் 30 நிமிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விபச்சார வழக்கில் கிஷன் கைதான பிறகு தெலுங்கு நடிகைகள் அமெரிக்கா வந்தாலே விசாரணை நடத்தப்படுகிறதாம்.
நடிகை
நான் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருப்பதால் எனக்கு நடந்த விஷயம் தெரியாது. நான் ஒரு நடிகை அதுவும் தெலுங்கு நடிகை என்றதுமே 30 நிமிடம் விசாரணை நடத்தினார்கள். எனக்கு அதிர்ச்சியாகவும், அசிங்கமாகவும் இருந்தது என்கிறார் மெஹ்ரீன்.
அதிகாரிகள்
நடிகைகள் அமெரிக்காவுக்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். அதனால் தான் அமெரிக்காவுக்கு வரும் அனைத்து தெலுங்கு நடிகைகளிடமும் விசாரணை நடத்துவதாக அவர்கள் மேலும் கூறினார்கள். அசவுகரியத்திற்கு அவர்கள் மன்னிப்பும் கேட்டனர் என்று மெஹ்ரீன் தெரிவித்துள்ளார்.
விஜய்
ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் நோட்டா படம் மூலம் அர்ஜுன் ரெட்டி படம் புகழ் விஜய் தேவரகொண்டா கோலிவுட் வந்துள்ளார். அந்த படத்தின் ஹீரோயின் மெஹ்ரீன் என்பது குறிப்பிடத்தக்கது.