Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Automobiles உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகைக்கு செக்ஸ் தொந்தரவு... இயக்குநர் மீது புகார்
மும்பை: நடிகைக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக இயக்குநர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்த சமாச்சாரம் நடந்தது இங்கல்ல... போஜ்புரி சினிமாவில்.
பிரபல போஜ்புரி நடிகை ரிது பாண்டே (வயது 22). 15-க்கும் மேற்பட்ட போஜ்புரி படங்களில் நடித்து பிரபலமாக உள்ளார்.
இவர் இந்திப்பட காஸ்டிங் இயக்குநர் (கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர், நடிகைகளை தேர்வு செய்து தருபவர்) வான்ஸ் பதக் மீது நேற்று மிரா ரோடு போலீஸ் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
அதில், "நான் ஒரு போஜ்புரி நடிகை. பாலிவுட் படவுலகில் நுழைந்து, இந்திப் படங்களில் நடித்து பிரபலம் ஆக விரும்பினேன். இதற்காக காஸ்டிங் இயக்குநர் வான்ஸ் பதக்கை ஒரு பொது நண்பர் மூலம் கோரோ காவ்வில் வைத்து சந்தித்துப் பேசினேன். இந்திப்பட வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொண்டேன்.
ஆனால் அவர் அந்தச் சந்திப்பிலிருந்து என்னை அவருடைய ஆசைக்கு இணங்குமாறு கூறி வருகிறார். அவரது ஆசைக்கு நான் இணங்கினால்தான் பெரிய ஆளாக வர முடியும் என்றும் அப்படி இணங்காவிட்டால் என் எதிர்காலத்தை அழித்து விடுவதாகவும் போனில் மிரட்டுகிறார்.
செல்போனிலும் ஆபாசமாக எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்...", என்று கூறியுள்ளார்.
இந்த புகார் குறித்து மிரா ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அவினாஷ் சவந்த் கூறுகையில், "நடிகையின் புகார் குறித்து விசாரித்து கொண்டிருக்கிறோம். வான்ஸ் பதக்கை அழைத்தும் விசாரணை நடத்துவோம். முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் தேவைப்பட்டால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்'' என்றார்.