Don't Miss!
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வாய்ப்புத் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை விவகாரம்.. பிரபல நடிகைகளுக்கு மகளிர் ஆணையம் சம்மன்!
மும்பை: மாடலிங் வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்ட வழக்கில், பிரபல நடிகைகளுக்கும் தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
Recommended Video
ஐஎம்ஜி வென்சர் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் சன்னி வர்மா. இந்த நிறுவனம், மிஸ்டர், மிஸ் இந்தியா போட்டிகளை பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறது.
ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. இதற்காக பல இளம் மாடல்களை இந்நிறுவனம் உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
ஆத்தாடி காம பார்வையால இருக்கு... ரியா சென் வெளியிட்ட ஹாட் பிக்ஸ் !
மகளிர் ஆணையம்
இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் பல நடிகர், நடிகைகள், சினிமா இயக்குனர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான 'பாரி' (PARI) என்ற அமைப்பின் நிறுவனர் யோகிதா பாயனா என்பவர் தேசிய மகளிர் ஆணையத்தில், புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் ஐஎம்ஜி வென்சர் நிறுவனம் மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறியிருந்தார்.
பாலியல் வன்கொடுமை
மாடலிங் வாய்ப்பு வாங்கி தருவாகக் கூறி பல இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர்களை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் இந்நிறுவனத்தின் சன்னி வர்மா மீது புகார் கூறியிருந்தார். மேலும் 'விண்ணப்பிக்கும்போது கட்டணமாக 2950 ரூபாய் வசூலித்துவிடுவார்கள். பிறகு சன்னி வர்மாவின் பெண் ஊழியர்கள், மாடலிங் ஆசைகொண்ட இளம் பெண்களிடம் நிர்வாண படங்களை கேட்பார்கள்.
நிர்வாணப் படம்
அதைக் கொடுத்தால் வாய்ப்பு உடனே கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறுவார்கள். நிர்வாணப் படம் கிடைத்த உடன், நிர்வாண வீடியோவுக்கு தள்ளுவார்கள். பிறகு சன்னி வர்மா, வாய்ப்பு வேண்டும் என்றால் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவர்களை தனது ஆசைக்கு கட்டாயப்படுத்துவார்' என்று புகாரில் கூறியுள்ளார். இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஊர்வசி ரவ்தெலா
சன்னி வர்மாவின் நிறுவனத்துக்கு பல டிவி, சினிமா நடிகர், நடிகைகள் வீடியோ மூலம் புரமோஷன் செய்துள்ளனர் என்றும் கூறியிருந்தார். அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் பற்றி தேசிய மகளிர் ஆணையம் விசாரித்து வருகிறது. ஐஎம்ஜி வென்சர் நிறுவனத்துக்கு வீடியோ மூலம் புரமோஷன் செய்துள்ள நடிகைகள் ஊர்வசி ரவ்தெலா, இஷா குப்தா, நாகினி நடிகை மவுனி ராய், பிரின்ஸ் நருல்லா, இயக்குனர் மகேஷ் பட் உட்பட பலருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நடிகர் சோனு சூட்
ஆனால், அவர்கள் மகளிர் ஆணையம் சொன்ன நேரத்தில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் வரும் 18 ஆம் தேதி ஆஜராகவேண்டும் என்று மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார். நடிகர் சோனு சூட்டும் இதன் விளம்பரத்தில் பங்கேற்றுள்ளார் என்றும் அவருக்கு அனுப்பப்படும் என்றும் அவர் ஒத்துழைப்பாகக் கூறியிருப்பதாகவும் ரேகா சர்மா கூறியுள்ளார்.