Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இளம் நடிகையின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகர்
மும்பை: இளம் நடிகையின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நடிகரும், பாடகருமான பவன் சிங் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போஜ்புரி படங்களில் நடித்து வருபவர் பவன் சிங். அவர் பாடகரும் கூட. அவர் மீது 25 வயது நடிகை ஒருவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை போலீசில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
அவர் போலீசாரிடம் கூறியிருப்பதாவது,
நடிகர் பவன் சிங் என் அந்தரங்க புகைப்படங்களை என் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் என்னை பற்றி அசிங்கமாக கமெண்ட்டும் செய்துள்ளார். நானும், அவரும் நட்பாக பழகி வந்தோம்.
இந்நிலையில் நட்பை தொடர வேண்டும் என்று என்னை தொடர்ந்து மிரட்டி வந்தார் பவன் சிங். அவர் மிரட்டலுக்கு நான் மசியாததால் என் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவிட்டார். பவன் சிங்கின் இந்த செயலால் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த நடிகை அளித்த புகாரின்பேரில் மும்பை போலீசார் பவன் சிங், அவரது உதவியாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. நடிகையின் புகாரின்பேரில் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. பவன் சிங் மீது புகார் தெரிவித்த நடிகை யார் என்ற விபரத்தை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.