twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை ராணியுடன் என்ன தான் பிரச்சனை?: உண்மையை சொன்ன சண்முகராஜன்

    By Siva
    |

    Recommended Video

    'ராணி சொல்வதெல்லாமே பொய்': நடிகர் விளக்கம்

    சென்னை: நடிகை ராணி தன் மீது பொய்யான பாலியல் புகார் தெரிவித்ததாக நடிகர் சண்முகராஜன் கூறியுள்ளார்.

    நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக ஓ போடு பாடல் புகழ் நடிகை ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் சண்முகராஜன் மன்னிப்பு கோரியதாகக் கூறி புகாரை வாபஸ் பெற்றார்.

    இந்நிலையில் இது குறித்து சண்முகராஜன் கூறியிருப்பதாவது,

    கைகலப்பு

    கைகலப்பு

    நடிகை ராணி என் மீது தெரிவித்த பாலியல் புகாரில் உண்மை இல்லை. படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் ராணி என்னை நிஜமாகவே அடித்தார். ஏன் இப்படி செய்தீர்கள் என்று நான் கேட்ட போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கை கலப்பில் முடிந்தது. இதையடுத்து அவர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். போலீசார் சமரசம் செய்து வைத்தனர்.

    [ இஞ்சி இடுப்பழகி: கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நடிகை திஷா ]

    பொய்

    பொய்

    நான் பாலியல் தொல்லை கொடுத்ததாக ராணி என் மீது பொய் புகார் அளித்துள்ளார். வீடு இருக்கும்போது நான் ஹோட்டலில் தங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். என் வீடு கேளம்பாக்கத்தில் இருக்கிறது. காலை 6 மணிக்கு படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்பதால் தயாரிப்பாளர் தான் எனக்கு ஹோட்டலில் ரூம் போட்டு தங்க வைத்துள்ளார்.

    கமல் ஹாஸன்

    கமல் ஹாஸன்

    ராணி அளித்த பாலியல் புகாரால் நானும், என் குடும்பத்தாரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். என்னை கமல் ஹாஸன் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். இதுவரை 90 படங்களில் நடித்துள்ளேன். இதுவரை யாருமே என் மீது இப்படி அவதூறு புகார் தெரிவித்தது இல்லை. ராணி பொய் சொல்லியுள்ளார்.

    விசாரணை

    விசாரணை

    ராணியின் புகார் குறித்து நடிகர் சங்கம் எங்கள் இருவரையும் விசாரித்து நான் தவறு செய்திருந்தால் எனக்கு நடிக்க தடை விதிக்கலாம். அதே போன்று அவர் மீது தவறு இருந்தால் அவருக்கு நடிக்க தடை விதிக்க வேண்டும் என நடிகர் சங்கத்தில் மனு அளித்துள்ளேன். நான் அவரிடம் அடிதடி பிரச்சனைக்கு தானே தவிர பாலியல் பிரச்சனைக்காக மன்னிப்பு கேட்கவில்லை. பாலியல் தொல்லை சம்பவமே நடக்கவில்லை. நடக்காத விஷயத்திற்கு நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார் சண்முகராஜன்.

    English summary
    Actor Shanmugarajan said that actress Rani has given false complaint against him accusing him of sexual harassment.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X