Don't Miss!
- News ஜாபர் சாதிக் செல்போனில் முக்கியமான கான்டாக்ட்ஸ்? நீதிமன்ற காவலை நீட்டித்து கோர்ட் உத்தரவு!
- Sports ரசிகர்கள் என்ன பணம் கறக்கும் மெஷினா? ஆர்சிபி அணியின் செயல்.. கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
கல்யாண் மாஸ்டர் மீதான பாலியல் புகார் பொய்யாம்: உண்மை இது தானாம்
Recommended Video
சென்னை: கல்யாண் மாஸ்டர் இலங்கை தமிழ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான தகவல் பொய் என்று தெரிய வந்துள்ளது.
பிரபல டான்ஸ் மாஸ்டரான கல்யாண் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் சினிமா ஆசையை விட்டுவிட்டு தனது சொந்த நாடான இலங்கைக்கே சென்றுவிட்டதாக பெண் ஒருவர் தெரிவித்ததை ட்விட்டரில் வெளியிட்டார் பாடகி சின்மயி.
தற்போது அந்த தகவல் பொய் என்று தெரிய வந்துள்ளது.
|
புகார்
சின்மயியின் ட்வீட்டுகளால் என்ன நடக்கிறது என்பதை பார்க்க காரணமே இல்லாமல் கல்யாண் மாஸ்டர் மீது புகார் தெரிவித்தது நான் தான். உங்களின் பெயரை பயன்படுத்தியதற்காக சாரி என்று ஒருவர் ட்வீட்டியதை கல்யாண் ரீட்வீட் செய்துள்ளார்.
|
சின்மயி
தனக்கு வரும் மெசேஜ்களை எந்த கேள்வியும் கேட்காமல் அப்படியே போஸ்ட் செய்கிறார் சின்மயி. அதனால் அவரின் ஆதாரமற்ற ட்வீட்டுகளை நம்ப வேண்டாம். ஆண்களை அசிங்கப்படுத்த பெண்ணியவாதிகள் இந்த மீ டூ டிரெண்டை பயன்படுத்துகிறார்கள் என்று கல்யாண் மாஸ்டர் மீது புகார் தெரிவித்த நபர் ட்வீட்டியுள்ளார்.
|
மீடியா
விளையாட்டுக்கு புகார் தெரிவிப்பதற்கு நான் தான் கிடைத்தேனா என்று அந்த நபரிடம் கேட்டுள்ளார் கல்யாண் மாஸ்டர். மேலும் அந்த விளக்க ட்வீட்டுகளை மீடியாவுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
|
பொய்
கல்யாண் மாஸ்டர் மீது பொய்யான தகவல் பரவுகிறது. இதை ஏற்க முடியாது என்று சின்மயி ட்வீட்டினார். இதை பார்த்த அந்த நபர், நீங்கள் தான் அவர் பற்றி வந்த ட்வீட்டை சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்தது. உங்களின் புகார்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளது. நீங்கள் தான் அதற்கு பொறுப்பு. என் கடமை என்பதால் உண்மையை சொன்னேன். அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்கிறார்.
செட்டப்
சின்மயி சொல்வது எல்லாம் பொய், விளையாட்டுக்காக கல்யாண் மாஸ்டர் மீது புகார் கூறினேன் என்கிற அந்த நபரின் ட்வீட்டுகளை பார்த்து கியாரே கட்டிங்கா, எவ்வளவு கிடைத்தது என்று கேட்கிறார்கள் நெட்டிசன்கள்.