Don't Miss!
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
படக்குழுவினருக்கு கொரோனா...தன்னை தனிமைபடுத்திக் கொண்ட ஷாருக்கான்
மும்பை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதால் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்புக்கள் நடத்தவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சினிமா பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால், பல படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஷாருக்கான் நடித்து வரும் பதான் படக்குழுவினர், பாதுகாப்பு நடவடிக்கையாக குழுவில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. பதான் படத்தின் பெரும்பாலான பகுதிகள் துபாயில் படமாக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதமாக மும்பையில் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் தகவலின்படி, படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் ஷாருக்கான் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டு இருந்து வருகிறார். பதான் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்க சிறிது காலம் ஆகும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரகாம் ஆகியோரும் நடித்து வந்தனர்.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்கத்தினர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. யாருக்காவது அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தாங்களாகவே முன்வந்து சோதனை செய்து கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.