Don't Miss!
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- News பாஜக கூட்டணியில் பாமகவிற்கு எத்தனை தொகுதிகள்? சற்று நேரத்தில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Finance வீட்டுக்கு ஏசி வாங்க போறிங்களா? ரூ.30,000க்கு கீழ் கிடைக்கும் பிராண்டட் AC-களின் பட்டியல் இதோ!..
- Automobiles பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
பிரியாமணிக்கு ரூ.300 கொடுத்த ஷாருக்கான்...எதுக்குன்னு தெரியுமா
மும்பை : தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் பிரபல நடிகையாக இருப்பவர் பிரியாமணி. வரிசையாக பல படங்களில் நடித்து வந்த பிரியாமணி, திடீரென தமிழ் பக்கம் தலைகாட்டவே இல்லை.
தெலுங்கில் பிஸியாக இருந்த பிரியாமணி, தற்போது இரண்டாவது ரவுண்டாக ஃபேமிலிமேன் 2 என்ற வெப்சீரிஸ் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த வெப் சீரிசில் சமந்தா, மனோஜ் பாய்பேயி நடித்திருந்தனர். இந்த வெப் சீரிஸ் நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது.
ஷாருக்கானுடன் குத்தாட்டம்
இதற்கு முன் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் 1234 என்ற பாடலுக்கு அவருடன் குத்தாட்டம் போட்டிருந்தார் பிரியாமணி. சமீபத்தில் ஜும் மூலம் அளித்த பேட்டி ஒன்றில் இது பற்றிய நினைவுகளை பகிர்ந்தார் பிரியாமணி.
ஷாருக்கை புகழ்ந்த பிரியாமணி
அப்போது, இந்த பாடல் ஷுட்டிங்கின் போது ஷாருக்கான் எனக்கு ரூ.300 கொடுத்தார். அவருடன் நடித்த முதல் நாளில் இருந்தே ரொம்ப கம்ஃபர்டபிளாக உணர்ந்தேன். ஷுட்டிங் துவங்கும் ஒரு நாளைக்கு முன்பே நான் சென்று விட்டேன்.
குரோர்பதி விளையாடிய பிரியாமணி
அப்போது இருந்து, ஷுட்டிங் முடியும் வரை மிகவும் இனிமையாக நடந்து கொண்டார். படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரிடமும் மிக அக்கறையுடன் நடந்து கொண்டார். படப்பிடிப்பிற்கு இடையே நாங்கள் ஐபேட்டில் கோன் பனேங்கே குரோர்பதி விளையாடினோம்.
இதுக்கு தான் ரூ.300 கொடுத்தாரா
அப்போது அவர் எனக்கு ரூ.300 கொடுத்தார். அதை இப்போது வரை நான் பத்திரமாக வைத்துள்ளேன் என கூறி ஷாருக்கானை மிகவும் புகழ்ந்து பேசினார். மேலும் இந்த பாடல் 5 இரவுகள் படமாக்கப்பட்டது. அது மிக சிறப்பான அனுபவம் என்றார்.