Don't Miss!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிரியாமணிக்கு ரூ.300 கொடுத்த ஷாருக்கான்...எதுக்குன்னு தெரியுமா
மும்பை : தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் பிரபல நடிகையாக இருப்பவர் பிரியாமணி. வரிசையாக பல படங்களில் நடித்து வந்த பிரியாமணி, திடீரென தமிழ் பக்கம் தலைகாட்டவே இல்லை.
தெலுங்கில் பிஸியாக இருந்த பிரியாமணி, தற்போது இரண்டாவது ரவுண்டாக ஃபேமிலிமேன் 2 என்ற வெப்சீரிஸ் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த வெப் சீரிசில் சமந்தா, மனோஜ் பாய்பேயி நடித்திருந்தனர். இந்த வெப் சீரிஸ் நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது.
ஷாருக்கானுடன் குத்தாட்டம்
இதற்கு முன் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் 1234 என்ற பாடலுக்கு அவருடன் குத்தாட்டம் போட்டிருந்தார் பிரியாமணி. சமீபத்தில் ஜும் மூலம் அளித்த பேட்டி ஒன்றில் இது பற்றிய நினைவுகளை பகிர்ந்தார் பிரியாமணி.
ஷாருக்கை புகழ்ந்த பிரியாமணி
அப்போது, இந்த பாடல் ஷுட்டிங்கின் போது ஷாருக்கான் எனக்கு ரூ.300 கொடுத்தார். அவருடன் நடித்த முதல் நாளில் இருந்தே ரொம்ப கம்ஃபர்டபிளாக உணர்ந்தேன். ஷுட்டிங் துவங்கும் ஒரு நாளைக்கு முன்பே நான் சென்று விட்டேன்.
குரோர்பதி விளையாடிய பிரியாமணி
அப்போது இருந்து, ஷுட்டிங் முடியும் வரை மிகவும் இனிமையாக நடந்து கொண்டார். படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரிடமும் மிக அக்கறையுடன் நடந்து கொண்டார். படப்பிடிப்பிற்கு இடையே நாங்கள் ஐபேட்டில் கோன் பனேங்கே குரோர்பதி விளையாடினோம்.
இதுக்கு தான் ரூ.300 கொடுத்தாரா
அப்போது அவர் எனக்கு ரூ.300 கொடுத்தார். அதை இப்போது வரை நான் பத்திரமாக வைத்துள்ளேன் என கூறி ஷாருக்கானை மிகவும் புகழ்ந்து பேசினார். மேலும் இந்த பாடல் 5 இரவுகள் படமாக்கப்பட்டது. அது மிக சிறப்பான அனுபவம் என்றார்.