Don't Miss!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ஷாருக்கை பிடிப்பது, பின்னர் மன்னிப்பு கேட்பது, இதே பொழப்பாப் போச்சு- இந்தியா காட்டம்
முன்னதாக ஷாரூக்கான் தடுக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்குமாறு இந்திய தூதர் நிருபமா ராவிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தியிருந்தார்.
ஒவ்வொருமுறையும் தடுப்பதும் பின்னர் மன்னிப்பு கோருவதும் ஒரு கொள்கையாகவே அமெரிக்கா வைத்திருப்பதை ஏற்க முடியாது என்று கூறுமாறும் கிருஷ்ணா தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க அரசிடம் இந்தியாவின் கண்டனத்தை நிருபமா ராவ் பதிவு செய்தார்.
இதையடுத்து அமெரிக்காவின் சுங்கத்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள், ஷாருக்கானை தடுத்து வைத்தற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளனர்.
யேல் பல்கலைக் கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக நியூயார்க் வந்திருந்தார். அப்போது அவரை 2 மணி நேரம் விமான நிலையத்திலேயே அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.
அதன் பின்னர் யேல் பல்கலைக் கழக மாணவர்களிடையே பேசிய ஷாரூக்கான், ஒவ்வொரு முறையும் அமெரிக்கா வரும்போதெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது என்று கூறினார்.