Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வெளியேறிய அக்கி, விக்கி: 'தல'யாக மாறும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்?
மும்பை: வீரம் படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் ஃபர்ஹத் சம்ஜி. தி லேண்ட் ஆஃப் லுங்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அக்ஷய் குமார் நடிப்பதாக இருந்தது. டேட்ஸ் பிரச்சனையால் அவர் விலக விக்கி கவுஷலை அணுகினார்கள். முதலில் நடிக்க ஒப்புக் கொண்ட அவரும் டேட்ஸ் பிரச்சனையை காரணம் காட்டி வெளியேறினார்.
இந்நிலையில் ஜீரோ படம் படுதோல்வி அடைந்த பிறகு புதுப்படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கும் ஷாருக்கானை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம். இது குறித்து ஷாருக்கானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
ஷாருக்கான் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வித்தியாசமாக நடித்த ஜீரோ படம் சுத்தமாக ஓடவில்லை. அதன் பிறகு ஒரு குட்டி பிரேக் எடுத்து குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறார்.
அவர் கடந்த வாரம் தனது மனைவி, 3 பிள்ளைகளுடன் மாலத்தீவுகளுக்கு சென்றார். இதற்கிடையே புதுப்படம் குறித்து ஷாருக்கான் கூறியதாவது,
நான் தற்போதைக்கு எந்த படத்திலும் நடிக்கவும் இல்லை, நடிக்க ஒப்புக்கொள்ளவும் இல்லை. வழக்கமாக ஒரு படம் முடியும் நேரத்தில் அடுத்த பட வேலைகளை துவங்கிவிடுவேன். 3-4 மாதங்கள் ஷூட்டிங் போகும். இப்படியே ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருந்தேன். ஆனால் தற்போது உடனே புதுப்படத்தை ஒப்புக் கொள்ளத் தோன்றவில்லை.
டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் சல்யூட் மை சிங்கப்பெண்ணே.. அசத்தும் விஜய் ரசிகர்கள்!
என் பிள்ளைகள் கல்லூரிக்கு செல்லும் நிலைக்கு வந்துவிட்டனர். அதனால் குடும்பத்தாருடன் கூடுதல் நேரம் செலவிட விரும்புகிறேன் என்றார்.
வீரம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படும் நேரத்தில் அஜித்தை வைத்து நேரடி இந்தி படத்தை தயாரிக்க விரும்புகிறார் போனி கபூர். அவரும் பேட்டி கொடுக்கும்போது எல்லாம் இந்த ஆசையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அஜித் கண்டுகொள்வதாக இல்லை.
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடிக்கும் படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.