Don't Miss!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சுற்றுலா தலமான ஷாரூக்கின் மங்களூர் வீடு!
கர்நாடக மாநிலத்தில் மங்களூரை ஒட்டிய பனம்பூரில் உள்ளது இந்த ஹார்பர் ஹவுஸ் எனும் இந்த பங்களா.
வட இந்திய நடிகராக அறியப்பட்டாலும், தாய் வழியில் தான் ஒரு தென்னிந்தியர்தான் என்று சொல்வது வழக்கம். சமீபத்தில் கர்நாடக மாநிலப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷாருக்கான், தனது தாத்தா மங்களூர் துறைமுகத்தில் பணியாற்றியவர் என்றும், தானும் சிறு வயதில் இங்கு வசித்திருந்ததாகவும் கூறினார்.
அவருடைய பேட்டி வெளியானபின்பு, ஷாருக்கானின் பங்களாவைப் பார்வையிடுவதற்காக பள்ளிச் சிறுவர்களும், அவருடைய ரசிகர்களும் அதிக அளவில் வருவதாக அங்கு பணிபுரியும் காவலாளிகள் தெரிவித்தனர்.
1963ஆம் வருடம் ஷிமோகாவிலிருந்து ஷாருக்கானின் தாத்தா இப்திகார் அகமது மங்களூர் வந்ததாகவும், நான்கு ஆண்டுகள் அங்கு அவர் பணிபுரிந்ததாகவும் கூறுகிறார் நாகேஷ் மரோல். இவர் ஷாரூக் தாத்தாவுடன் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அன்றைக்கு ஷாரூக்கான் குடும்பத்துக்கு காரோட்டிய டிரைவரான மெஹ்மூத் என்பவர் இப்போது மங்களூரில் வசிப்பதும் தெரிய வந்துள்ளது.
இப்போது ஷாரூக்கானுக்கு மங்களூர்வாசிகள் புதிய கோரிக்கை வைத்துள்ளனர். ஒரு முறையாவது மங்களூருக்கு வந்து தன் பங்களாவில் அவர் தங்க வேண்டும், தாத்தா பணியாற்றிய துறைமுகத்தைப் பார்க்க வேண்டும் என்பதும்தான் அது!