Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஆபாசப் பட வழக்கு-நடிகை ஷகீலா உள்பட 9 பேர் கோர்ட்டில் ஆஜர்
பாளையில் உள்ள சினிமா தியேட்டரில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி இளமை கொண்டாட்டம் என்ற மலையாள படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தில் அரசால் அனு்மதிக்கப்பட்ட காட்சியை விட ஆபாசமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தியேட்டருக்கு அதிரடியாக சென்ற போலீசார் படச்சுருளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக ஆபரேட்டர் பரமசிவன், தியேட்டர் குத்தகை உரிமையாளர் மதுரையை சேர்ந்த வசீகரன், தியேட்டர் ஊழியர்களான சிவசுப்பிரமணியன், சுப்பிரமணியன், முருகன், மாரிமுத்து, தாமஸ், மற்றும் ஆபாச படத்தில் நடித்ததாக நடிகை ஷகீலா, நடிகர் தினேஷ் ஆகிய 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நெல்லை ஜேஎம் 1 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட நடிகை ஷகீலா, நடிகர் தினேஷ் உள்பட 9 பேர் கோர்ட்டில் ஆஜாராகினர். கோர்ட்டில் சாட்சிகள் அனைவரும் விசாரிக்கப்பட்டு கேள்வி கேட்கப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ராஜேந்திர கண்ணன் ஏப்ரல் 1ம் தேதிக்கு ஓத்தி வைத்து உத்தரவிட்டார்.