Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
9 வருடமாக இழுத்து வந்த ஆபாசப் பட வழக்கிலிருந்து ஷகீலா ஒரு வழியாக விடுதலை
கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் போலீஸார் ரெய்டு போனார்கள். அங்கு அப்போது ஒரு மலையாளப் படம் ஓடிக் கொண்டிருந்தது. சோதனையின்போது சென்சார் போர்டின் அனுமதி பெறாத ஆபாசக் காட்சிகள் அடங்கிய படச்சுருளை போலீஸார் கைப்பற்றினர். அதில் ஷகீலா, நடிகர் தினேஷ் ஆகியோர் நடித்திருந்த காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இதையடுத்து ஷகீலா, தினேஷ், தியேட்டர் மேலாளர் பாஸ்கர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் பாஸ்கர் தப்பி விட்டார். மற்ற 9 பேரும் கைது செய்யப்பட்டு நெல்லை குற்றவியல் முதலாவது கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர்.
கடந்த 9 வருடமாக இந்த வழக்கு இழுத்துக் கொண்டிருந்தது. விசாரணைக்காக சில முறை ஷகீலா கோர்ட்டுக்கு வந்துள்ளார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ராமலிங்கம் நேற்று தீர்ப்பை அளித்தார். தீர்ப்பையொட்டி ஷகீலா, தினேஷ் உள்ளிட்ட 9 பேரும் வந்திருந்தனர். அப்போது அனைவரையும் விடுதலை செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் சந்தோஷத்துடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி கோர்ட்டை விட்டுக் கிளம்பிச் சென்றனர்.