மேல்மலையனூர் கோயில் விழாவில் ஷகிலா.. உற்சாகத்தில் மேலே விழுந்த ரசிகர்கள்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இந்த விழாவுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.
நேற்று இரவு நடிகைகள் ஷகிலா, சுஜிபாலா ஆகியோர் இந்தக் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த போது, பக்தர்களாக வந்திருந்த ரசிகர்கள் கண்ணில் மாட்டினர்.
அவ்வளவுதான்... சாமியை அம்போவென விட்டுவிட்டு, பீரானந்தி என்ற பெண் சாமியாராக நடித்த ஷகிலாவைச் சூழ்ந்து கொண்டனர். பல ரசிகர்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று ஷகிலா மேல் விழ ஆரம்பிக்க, காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார் ஷகிலா. உடனே பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர்.
ஆனாலும் ஷகிலாவும் சுஜிபாலாவும் உடனே கிளம்பிவிடவில்லை. கிட்டத்தட்ட 3 மணி நேரம் காத்திருந்து அம்மனின் ஊஞ்சல் உற்சவத்தைப் பார்த்தனர். போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டதால், தொல்லையின்றி பார்த்து ரசித்தனர்.


Click it and Unblock the Notifications











