Don't Miss!
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மேல்மலையனூர் கோயில் விழாவில் ஷகிலா.. உற்சாகத்தில் மேலே விழுந்த ரசிகர்கள்!
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இந்த விழாவுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர்.
நேற்று இரவு நடிகைகள் ஷகிலா, சுஜிபாலா ஆகியோர் இந்தக் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்த போது, பக்தர்களாக வந்திருந்த ரசிகர்கள் கண்ணில் மாட்டினர்.
அவ்வளவுதான்... சாமியை அம்போவென விட்டுவிட்டு, பீரானந்தி என்ற பெண் சாமியாராக நடித்த ஷகிலாவைச் சூழ்ந்து கொண்டனர். பல ரசிகர்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று ஷகிலா மேல் விழ ஆரம்பிக்க, காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார் ஷகிலா. உடனே பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து இருவரையும் மீட்டனர்.
ஆனாலும் ஷகிலாவும் சுஜிபாலாவும் உடனே கிளம்பிவிடவில்லை. கிட்டத்தட்ட 3 மணி நேரம் காத்திருந்து அம்மனின் ஊஞ்சல் உற்சவத்தைப் பார்த்தனர். போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டதால், தொல்லையின்றி பார்த்து ரசித்தனர்.