பிறந்தநாளும் அதுவுமாக அஜீத்தை அழ வைத்த ஷாலினி
Recommended Video

சென்னை: பிறந்தநாளும் அதுவுமாக அஜீத் கண்கலங்கிய சம்பவம் நடந்திருக்கிறது.
அமர்க்களம் படத்தில் நடித்தபோது அஜீத்தும், ஷாலினியும் காதலிக்கத் துவங்கினார்கள். அஜீத் தனது காதலை ஷாலினியிடம் தெரிவிக்க அவரும் சம்மதம் கூறினார்.
பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஷாலினி
அஜீத் ஒரு பொக்கே வாங்கிக் கொடுத்து ஷாலினியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஷாலினியின் நிதானமான குணம் அவருக்கு பிடித்திருந்தது.

வாழ்த்து
காதலித்தபோது அஜீத் பிறந்தநாள் அன்று நள்ளிரவு 12 மணிக்கு போன் செய்து வாழ்த்தியிருக்கிறார் ஷாலினி. என்னுடன் பேசிக் கொண்டே வீட்டிற்கு வெளியே சென்று பாருங்கள் என்றும் கூறியுள்ளார்.

பரிசு
அஜீத்தும் வெளியே சென்று பார்த்தால் அங்கு ஒரு கார் நின்று கொண்டிருந்திருக்கிறது. அந்த கார் டிக்கி முழுக்க பரிசுப் பொருட்களாக இருந்திருக்கிறது.

கண்ணீர்
தனக்கு என்னென்னவெல்லாம் பிடிக்கும் என்று அஜீத் கூறியிருந்தாரோ அத்தனையையும் வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார் ஷாலினி. அதை பார்த்து அஜீத்துக்கு மகிழ்ச்சியில் கண் கலங்கிவிட்டதாம்.


Click it and Unblock the Notifications