இன்று ஷமிதாப்... தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் இந்திப் படம்!
அமிதாப் பச்சன், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஷமிதாப் படம் இன்று உலகெங்கும் வெளியாகிறது.
தமிழகத்தில் அதிக அரங்குகளில் வெளியாகும் முதல் இந்திப் படம் என்ற பெருமையை ஷமிதாப் பெற்றுள்ளது.
தனுஷ் - அக்ஷரா ஜோடியாக நடிக்க, முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். ஆர் பால்கி எழுதி இயக்கியுள்ளார்.

இதுவரை தன் எந்தப் படத்துக்கும் செய்யாத அளவு விளம்பரப் பணிகளை இந்தப் படத்துத்து செய்தார் பால்கி. இளையராஜா இசையமைத்துள்ளார்.
இன்று உலகம் முழுவதும் அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ஷமிதாப்.

சென்னையில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட அரங்குகளிலும், தமிழகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட அரங்குகளிலும் ஷமிதாப் வெளியாகிறது. படத்துக்கான முன்பதிவும் சிறப்பாக இருந்தது.
தமிழகத்தில் இத்தனை அரங்குகளில் வெளியாகும் முதல் திரைப்படம் ஷமிதாப்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











