Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் விபரீதம்.. டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டு ஜெயில்.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திரைத் துளி
"மிஸ் இந்தியா போட்டியில் வெல்பவர் தான் இந்தியாவின் சார்பில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டிகளில் பங்கேற்க முடியும்.மிஸ் இந்தியா போட்டியில் இதில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பவர் தான் மிஸ் வோர்ல்ட் போட்டியில் பங்கேற்க முடியும்.3வது இடம் பிடிப்பவர் மிஸ் எர்த் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்.
இதனால் பெமினா மிஸ் இந்தியா போட்டி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
நாடு முழுவம் தேர்வுச் சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் இந்தப் போட்டிக்கு அழகிகள் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.
கடந்த மாதம் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான தகுதிச் சுற்றுப்போட்டிகளின் முடிவில் 23 அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இறுதிச் சுற்றில் சென்னையைச் சேர்ந்த ஷம்ஷத்தும் தேர்வாகியுள்ளார்.
மிஸ் இந்தியா-2005யைத் தேர்வு செய்யும் இறுதிப் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது.
போட்டியில் வெல்பவருக்கு கடந்த ஆண்டின் மிஸ் இந்தியாவான தனுஸ்ரீ பட்டத்தை சூட்டுவார்.
இதில் பங்கேற்கும் சென்னையைச் சேர்ந்த ஷம்சாத் பேகம் நல்லி சில்க்ஸ், ஹீரோ ஹோண்டா, ஹார்ப்பிக் கிளீனர்உள்ளிட்ட டிவி, பத்திரிக்கை விளம்பரங்களில் நடித்துள்ளார். 4 வருடமாக மாடலிங்கில் இருக்கிறார்.