Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நஷ்ட ஈடுதான வேணும், இந்தாங்க... படாரென இறங்கிய ஹீரோ... தடையை நீக்குகிறது தயாரிப்பாளர் சங்கம்!
சென்னை: நஷ்ட ஈடு தர சம்மதித்ததை அடுத்து இளம் ஹீரோ மீதான தடையை தயாரிப்பாளர் சங்கம் நீக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழில் விக்ரம், சீனு ராமசாமி படங்களில் நடிக்க இருந்தவர் இளம் ஹீரோ ஷேன் நிகம்.
மலையாள சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான இவர், கும்பளங்கி நைட்ஸ் உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
அந்த 7ஜி ரெயின்போ காலனிக்குள் இந்த ஆயிரத்தில் ஒருவன் இருப்பார்.. ஹேப்பி பர்த்டே செல்வராகவன் சார்!
கூடுதல் சம்பளம்
வெயில் என்ற படத்தில் நடிக்க ரூ.40 லட்சம் சம்பளத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஷூட்டிங் தொடங்கி நடந்துகொண்டிருந்தபோது, கூடுதலாக சம்பளம் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. இதற்கு அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜ் மறுத்ததால், அந்த படத்துக்கு டப்பிங் பேச மறுத்துவிட்டாராம். அதோடு படத்துக்கான தனது கெட்டப்பை மாற்றி, புதிய புகைப்படங்களை வெளியிட்டார்.
தடை விதிப்பு
அதிர்ச்சி அடைந்த ஜோபி ஜார்ஜ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார். ஷேன் நிகாமால், ரூ. 3 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், படம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜோபி ஜார்ஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதோடு அவர் நடித்து வந்த குர்பானி படத்தின் தயாரிப்பாளரும் புகார் செய்தார். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் குறித்து தரகுறைவாகப் பேசியதால், அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
தமிழ் படங்களில்
தடை தொடர்ந்ததால், ஷேன் நிகாம் படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், இந்தப் பிரச்னை பற்றி நடிகர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது அவரால் படங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை அவர் சரிகட்ட வேண்டும் என்று ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது.
மோகன்லால்
இந்நிலையில் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்பதாகவும், வெயில் படத்துக்காக பேசப்பட்ட 40 லட்சத்தில் பாக்கித்தொகையான 16 லட்சம் தனக்கு வேண்டாம் என்றும் ஷேன் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜுக்கு கடிதம் எழுதினார். இந்நிலையில் இந்தப் பிரச்னை குறித்து மலையாள நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள், நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஒப்புக்கொண்டார்
சங்கத்தின் தலைவர் மோகன்லால் தலைமையில், இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் நஷ்ட ஈடு தர நடிகர் ஷேன் நிகம் ஒப்புக்கொண்டார். ஆனால், எவ்வளவு தொகையைத் தர ஒப்புக்கொண்டார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இதனால் அவருக்கான தடையை கேரள தயாரிப்பாளர் சங்கம் நீக்கும் என்று தெரிகிறது.