Don't Miss!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
'ஃபர்ஸ்ட் காப்பியெல்லாம் பண்ண முடியாது... ஏன்னா.. எவ்ளோ செலவுன்னு எனக்கே தெரியாது!' - ஷங்கர்
அது என்ன ஃபர்ஸ்ட் காப்பி என்கிறீர்களா..
ஒரு படத்துக்கு இயக்குநர், ஹீரோ, டெக்னீஷியன் உள்ளிட்டோர் சம்பளம் உள்பட ரூ 5 கோடி பட்ஜெட் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தொகையை முதல் பிரதிக்கான தொகையாக எண்ணி இயக்குநரிடம் தந்துவிட் வேண்டும். தயாரிப்பாளர் தலையீடு இல்லாமல் அனைத்தையும் இயக்குநரே தீர்மானித்து முதல் பிரதியை முடித்து தயாரிப்பாளரிடம் கொடுத்துவிடுவார். அதன் பிறகு தேவையான அளவு பிரதிகள் போட்டு தயாரிப்பாளர் வெளியிடுவார்.
ஒரு சிலர் போட்ட பட்ஜெட்டுக்குள் எடுத்து பணத்தை மிச்சப்படுத்திக் கொள்வார்கள். பாலா, அமீர் மாதிரி இயக்குநர்கள் பட்ஜெட்டை விட கூடுதலாகச் செலவு செய்துவிட்டு, தயாரிப்பாளர்களுடன் மோதுவார்கள். தயாரிப்பாளர் ஒப்புக் கொள்ளாவிட்டால், அவர்கள் கொடுத்த தொகையை திருப்பித் தந்துவிட்டு, தங்கள் பேனரிலேயே வெளியிடவும் செய்வார்கள்... இப்போது பரதேசி வருவது அப்படித்தான்.
இதை சொல்ல வந்ததே வேறு ஒரு செய்தியைச் சொல்லத்தான்...
சமீபத்தில் இயக்குநர் ஷங்கரிடம் போய் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ஒரு படம் பண்ணித் தாருங்கள். உங்கள் பட்ஜெட்டைக் கொடுங்கள் என்று கேட்டாராம் ஒரு தயாரிப்பாளர்.
ஆனால் ஷங்கர் அது தன்னால் முடியாது என்று கூறிவிட்டாராம். ஏன்?
'எனது படமாக்கும் ஸ்டைலே வேறு. எந்த காட்சியை எப்படி எடுப்பேன், எவ்வளவு செலவாகும் என்ற கணக்குப் பார்க்காமல் எடுப்பதே என் வழக்கம். சமயத்தில் நான் கொடுப்பதை விட இருமடங்கு கூட செலவாகலாம். எனவே அதெல்லாம் சரிப்பட்டு வராது. முழுப்படத்தையும் முடிக்கும் வரை செலவு செய்ய நீங்கள் தயாரென்றால் மேலே பேசலாம்," என்றாராம்.