Don't Miss!
- News கெஜ்ரிவால் கைது மட்டுமல்ல.. காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கமும் எங்களுக்கு தெரியும்! அமெரிக்கா
- Technology ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- Lifestyle 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- Sports நீ தான் தம்பி சிஷ்யன்.. பவுலிங் செய்வதற்கு முன் தோனி காலில் விழுந்த பதிரனா.. தல ரியாக்சன் பாருங்க!
- Finance வாரன் பஃபெட்- நானும் படுக்கமாட்டேன், தள்ளியும் படுக்கமாட்டேன்..! சம்பளம், ஈவுத்தொகைக்கு பெரிய 'நோ'
- Automobiles ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
எந்திரன் கதை திருட்டு வழக்கு: ஷங்கர் நாளை ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!
எந்திரன் கதை திருட்டு வழக்கில் நாளை ஆஜராக இயக்குனர் ஷங்கருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: எந்திரன் திரைப்பட கதை திருட்டு வழக்கில் இயக்குனர் ஷங்கர் நாளை ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன். இந்தப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்போது இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது.
2010 ஆம் ஆண்டு எந்திரன் ரிலீஸ் ஆனபோது, அந்த படத்தின் கதை தன்னுடையது எனவும், நஷ்ட ஈடாக ரூ.1 கோடி தர வேண்டுமெனவும் வழக்கு தொடர்ந்தார் எழுத்தாளர் ஆரூர்
7 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு நடந்து வரும் நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தன் தரப்பு ஆதாரங்களை ஷங்கர் ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விட்டார்.
இந்த வழக்கின் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணையை கடந்த ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஷங்கரின் உதவியாளர் யோகேஷ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ஷங்கரின் உதவியாளர் யோகேஷ் சாட்சியளிக்க வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கதை திருட்டு தொடர்பாக ஷங்கர் நேரில் ஆஜராக வேண்டுமெனவும் எழுத்தாளர் ஆரூர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நாளை இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது
ரஜினிகாந்த், அக்ஷய் குமர், ஏமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள எந்திரன் 2.0, இந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.