Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
3.0 எடுக்க ஆசை தான், ஆனால் அதுக்கு...: ஷங்கர் ஓபன் டாக்
Recommended Video
சென்னை: 3.0 படம் எடுக்கும் திட்டம் உள்ளது என்று இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. படத்தை லைகா நிறுவனம் அமோகமாக விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 2.0 பற்றி ஷங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ஐஸ்வர்யா ராய்
2.0 வித்தியாசமான கதை, கதாபாத்திரங்கள் கொண்ட படம். அதனால் தான் எந்திரனில் நடித்த ஐஸ்வர்யா ராயை இந்த படத்தில் நடிக்க வைக்கவில்லை. புது கதாபாத்திரம் என்பதால் ஏமி ஜாக்சனை நடிக்க வைத்தோம். இருப்பினும் 2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரம் குறித்து சொல்லப்படும்.
3.0
3.0 படம் எடுக்கும் ஐடியா உள்ளது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதில் நடிக்க சம்மதித்தால் மட்டுமே எடுப்பேன். சிட்டி கதாபாத்திரத்தில் ரஜினி சாரை தவிர வேறு யாரையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அவர் அவ்வளவு அழகாக பொருந்தியுள்ளார். சரியான ஸ்க்ரிப்ட் அமைந்தால் 3.0 உருவாகும்.
ரோபோ
அடுத்த பாகம் எடுக்க வேண்டும் என்பதற்காக 3.0 படம் எடுக்க நான் விரும்பவில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சிட்டி மூலம் அவர்களை மகிழ்விக்க விரும்புகிறேன். சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர்மேன் போன்று நம் நாட்டில் ரோபோ இருக்க விரும்புகிறேன் என்கிறார் ஷங்கர்.
|
அக்ஷய் குமார்
2.0 படத்தை லைகா நிறுவனம் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அக்ஷய் குமார் தன் பங்கிற்கு ட்விட்டரில் விளம்பரம் செய்து வருகிறார். ட்விட்டரில் அவரை 28.6 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.