Don't Miss!
- News செந்தில் பாலாஜி முதல் கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் எடுத்த ஆயுதத்தை வைத்தே அவர்களை காலி செய்யும் பாஜக
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சாஹசம் படத்துக்காக பின்னணி பாடிய சங்கர் மகாதேவன்!
பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘சாஹசம்' படத்தில், முன்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவனும் ஒரு பாடல் பாடினார்.
இப்படத்தை அருண்ராஜ் வர்மா என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். தமன் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பாடல்கள் பாடியுள்ளனர்.
ஏற்கெனவே, அனிருத், நடிகை லஷ்மி மேனன், ஆண்ட்ரியா, இந்தியாவின் சிறந்த பாடகர்களான மோஹித் சவ்ஹான், யோ யோ ஹனிசிங், அர்ஜித் சிங் ஆகியோர் தலா ஒரு பாடல் பாடியுள்ளனர்.
இந் நிலையில், இசையமைப்பாளரும், முன்னணி பாடகருமான சங்கர் மகாதேவனும் இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல் நேற்று மும்பையில் பதிவானது. பெண்களை கவரும் வண்ணம் பாடலாசிரியர் கபிலன் எழுதிய இந்த பாடலை ஏற்கெனவே ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார்.
இப்போது பிரசாந்த் பாடும் வரிகளை ஷங்கர் மகாதேவன் பாடியது சிறப்பாக வந்துள்ளது என தயாரிப்பாளரும் இயக்குனருமான தியாகராஜன் கூறியுள்ளார். மும்பையில் சங்கர் மகாதேவன் பாடல் பதிவாகும்போது உடன் இருந்த பிரசாந்த் உற்சாக மிகுதியில் ரிக்கார்டிங் தியேட்டரிலேயே மகிழ்ச்சியோடு சங்கர் மகாதேவனை கட்டித் தழுவி பாராட்டினாராம்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'சாஹசம்' படத்தின் பாடல்களை கேட்பதற்கு ஒட்டுமொத்த இசை பிரியர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.