Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய் சொன்னது போன்று கம்முன்னு இருந்து கைதட்டல் வாங்கிய ஷங்கர்
Recommended Video
சென்னை: ஷங்கர் அமைதியாக இருந்து காரியம் சாதித்துவிட்டார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. ஷங்கர் சும்மாவே பிரமாண்டமாக படம் எடுப்பார், இதில் லைகா தயாரிப்பு வேறு என்றால் சொல்லவா வேண்டாம்.
படத்தை பார்ப்பவர்களால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
தாமதம்
ஷங்கர் ஒரு படத்தை இயக்கினால் அதை இழுத்தடிக்க மாட்டார். முதலில் பக்காவாக திட்டமிட்ட பிறகே பட வேலைகளை துவங்குவார். ஆனால் 2.0 படம் மட்டும் ஆண்டுக் கணக்கில் இழுத்துக் கொண்டே போனது. இதை பார்த்தவர்கள் இந்த படம் அவ்வளவு தான், ரிலீஸாகாது என்று அவர் காதுபடவே பேசினார்கள்.
ஷங்கர்
தன்னை பற்றியும், தன் படத்தை பற்றியும் பலரும் பலவிதமாக பேசியதை கேட்டு ஷங்கர் கோபப்பட்டு கத்தவில்லை. மாறாக அமைதியாக இருந்தார். தான் பதில் அளிப்பதை விட படத்தை ரிலீஸ் செய்து அதை பார்த்து ரசிகர்களை பிரமிக்க வைப்பதன் மூலம் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்து காரியத்தில் கண்ணாக இருந்தார்.
கிண்டல்
கிராபிக்ஸ் பணிகளால் தான் 2.0 படம் இத்தனை ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருந்தது. அதற்கு என்ன பெரிய கிராபிக்ஸாம் என்று பலரும் ஷங்கரை கிண்டல் செய்தார்கள். உசுப்பேத்துறவன்ட உம்முனும், கடுப்பேத்துறவன்ட கம்முனும் இருந்தார் ஷங்கர். அதன் பலன் இன்று கிடைத்து ஜம்முன்னு சிரிக்கிறார் அவர்.
பாராட்டு
விஷுவல் எஃபெக்ட்ஸை பார்த்து வியக்காதவர்களே இல்லை. கிராபிக்ஸ் வேலை என்று ஷங்கர் சொன்னது அப்போ புரியல, இப்போ புரிகிறது என்று படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். படம் நிச்சயம் வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று நம்பப்படுகிறது.
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!