Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
காக்கிச்சட்டையில் கலக்கப்போகும் ஷம்மு! இன்னும் பேர் வைக்கல!
சென்னை: மதுரவீரனை தொடர்ந்து நடிகர் சண்முகப்பாண்டியன் போலீசாக புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
நடிகர் விஜயகாந்தின் மகனான சண்முகப்பாண்டியன், சகாப்தம் என்ற படத்தில் நடித்தார். அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.
இருப்பினும் சண்முகப்பாண்டியனுக்கு நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றது. இதைத்தொடர்ந்து மதுர வீரன் என்ற படத்தில் நடித்தார் சண்முகபாண்டியன். கடந்த ஆண்டு வெளியான இந்தப்படமும் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.
அப்பா ரஹ்மான் இசையமைக்க அமீன் பாடிய சகோ பாடல்: பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க
இந்நிலையில் தற்போது சண்முகபாண்டியன் புதிய படம் ஒன்றில் போலீஸாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை.
இந்தப் படத்தில் ரோனிகா, அர்ச்சனா, முனீஸ்காந்த் நடிக்கின்றனர். ஜி என்டர்டெயினர்ஸ் தயாரிக்கிறது. இந்த புதிய படத்தை ஜி.பூபாலன் இயக்குகிறார். இந்த படத்திற்கு பி.ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.
கேமராமேன் முரளி கிரிஷ் ஒளிப்பதிவு செய்கிறார். அருண்ராஜ் இசையமைக்கிறார். படத்தின் வேலைகள் தொடங்கியவுடன் பெயர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.