Don't Miss!
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
நண்பேன்டா.. நெதர்லாந்தில் சிக்கிய 'கேப்டன்' மகன்.. ஃபேஸ் டைம் போட்டோஷூட் நடத்திய பார்த்திபன் மகன்!
சென்னை: நடிகர் சண்முகபாண்டியனை வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட் செய்திருக்கிறார், நடிகர் பார்த்திபன் மகன்.
Recommended Video
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜய்காந்தின் மகன் சண்முகபாண்டியன். இவர், சகாப்தம் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
சுரேந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் நேகா ஹிங்கே, சுப்ரா ஐயப்பா உட்பட பலர் நடித்திருந்தனர்.
'தல' பர்த் டே..'அந்த காலத்துல அஜித்தோட கனவு வேறயா இருந்தது..' முதல்பட இயக்குனர் ஸ்பெஷல் பேட்டி!
மதுரைவீரன்
இதையடுத்து அவர் நடித்த படம், மதுரைவீரன். இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கினார். இதில் மீனாட்சி, வேல ராமமூர்த்தி, சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி கவனிக்கப்பட்டது. இதையடுத்து அவர் 'மித்ரன்' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.
போலீஸ் அதிகாரி
இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். இதற்காக தனது உடல் கட்டமைப்பை மாற்ற நெதர்லாந்து நாட்டுக்குச் சென்றிருந்தார். அப்போதுதான் கொரோனா காரணமாக, லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் அங்குச் சிக்கிக்கொண்டார். அங்குள்ள சுமோ ஆம்ஸ்டாம் நகரில் இப்போது இருக்கிறார் சண்முகபாண்டியன்.
போட்டோ ஷூட்
அவரை நடிகர் பார்த்திபனின் மகன், ராக்கி பார்த்திபன் 'ஃபேஸ் டைம் போட்டோ ஷூட்' எடுத்திருக்கிறார். இது வீடியோ மூலமாகவே புகைப்படத்தை எடுக்கும் புதிய முயற்சியாம்.
இதன் மூலம் ஒருவரை, அவர் அருகில் இல்லாவிட்டாலும் வீடியோ மூலமாகவே புகைப்படம் எடுக்க முடியுமாம். அதை சண்முக பாண்டியனும் ராக்கி பார்த்திபனும் இணைந்து எடுத்துள்ளனர்.
ஆக்ஷன் படங்களில்
இவர்கள் இருவரும் நண்பர்கள். இவர்கள் எடுத்த போட்டோஸ், சண்முகபாண்டியன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது. இந்த மித்ரன் படத்தை அடுத்து, மேலும் இரண்டு ஆக்ஷன் படங்களில் நடிக்க இருக்கிறார் சண்முகபாண்டியன். அதற்கான அறிவிப்பு லாக்டவுன் முடிந்ததும் வெளியாகும் என்று அவர் தரப்பில் கூறப்படுகிறது.